திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை: செந்தில் பாலாஜி தலைமறைவா? – உச்சகட்ட பரபரப்பு!

சென்னை:

தவெக எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நேற்றைய தினம் கையெழுத்திட ஆஜராகாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை செந்தில் பாலாஜிக்கு வழங்கியது. அதன்படி, செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை ஆகிய இருவேளையும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், கடந்த ஐந்து நாட்களாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இருவரும் முறையாக ஆஜராகிக் கையொப்பமிட்டு வந்தனர். அப்போது அவர்களிடம் குதிரை பேர வழக்கு தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணையும் நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆறாவது நாளான நேற்று (ஜூலை 30) செந்தில் பாலாஜி காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் என்னவென்று காவல் நிலைய தரப்பிற்கும் தெரிவிக்கப்படவில்லை. இந்த வழக்கிற்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த செந்தில் பாலாஜி, திடீரென மருத்துவமனைக்குச் சென்றிருப்பதால் ஆஜராகவில்லை என்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும், செந்தில் பாலாஜி தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதேசமயம், அவரது சகோதரர் அசோக் குமார் இன்று காலை வழக்கம் போல் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

இதனிடையே, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கில், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கச் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த மனுவை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் எந்நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய செந்தில் பாலாஜி தரப்பினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. முன்ஜாமீன் தள்ளுபடியான நிலையில் செந்தில் பாலாஜி காவல் நிலையத்திற்கும் வராததால், அவர் தலைமறைவாகி விட்டாரா என்ற மிகப்பெரிய சந்தேகம் தற்போது வலுத்துள்ளது.

#SenthilBalaji #Absconding #TriplicanePolice #TvkMlaCase #BmNews #TamilNews #BreakingNewsTN #TasmacScam #HighCourt #TamilNaduPolitics #PoliticalUpdate #TamilNewsLive

5

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைகிறேனா? ஓபிஎஸ் தரப்பு விளக்கம்!

July 31, 2026

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை அவரது தரப்பு

4

வடலூர் வள்ளலார் பன்னாட்டு மைய திட்டம் கைவிடப்பட்டது வரவேற்புக்குரியது – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

July 31, 2026

சென்னை: வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்திய ஞானசபை வளாகத்துப் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகச் சென்னை

df

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 32 தொழிலாளர்கள் உயிரிழப்பு

July 31, 2026

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வாயு வெடிப்பில் குறைந்தது

r

புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன!

July 31, 2026

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் நேற்று வியாழக்கிழமை

tn

இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

July 31, 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த

v

நெல்லியடி பிரதேசத்தில் மர்ம பொதிகள் மீட்பு

July 31, 2026

வடமராட்சி – நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 16 kg கேரள கஞ்சா

trum

சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு வழங்கும் நிதியை முழுமையாக நிறுத்தியது அமெரிக்கா

July 31, 2026

அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு

hea

இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு

July 31, 2026

எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி

Pol

பொலிஸார் தொடர்பாக கடுமையாகும் சட்ட நடவடிக்கை

July 31, 2026

பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான

3

கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகிறதா? – வேல்முருகன் ஆவேச கேள்வி!

July 31, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் கர்நாடக அரசுக்கு,

Shakthivel

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை எமக்கு நீதி கிட்டப் போவதில்லை

July 31, 2026

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை

2

சிவப்பு + மஞ்சள் = காவி என்பது உறுதியாகிவிட்டது: தவெக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

July 31, 2026

சென்னை: நீட் தேர்வு மற்றும் இ.டபிள்யூ.எஸ் (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர