தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்குமாறு கோரி காரைநகரில் போராட்டம்

தண்ணீர், வீதி பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி நேற்று (17) காரைநகர் – ஊரி, பாலாவோடை, கல்லந்தாழ்வு, வேரப்பிட்டி, மருதபுரம், பெரயடைப்பு, நீலங்காடு பகுதி மக்கள் இன்றையதினம் காரைநகர் பிரதேச செயலக்த்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது திட்டமிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் முகமாக மக்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த திணைக்கள அதிகாரிகளை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் திணைக்கள அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

அதனை தொடர்ந்து காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா, பிரதேச செயலர் உள்ளிட்ட பதவி நிலை அதிகாரிகள் சிலர் போராட்ட இடத்திற்கு வருகை தந்தனர்.

இதன்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

அபிவிருத்தி பணிகளில் தொடர்ச்சியாக எங்களை புறக்கணித்து வருகின்றனர். நடமாட்டம் குறைந்த காட்டு பகுதிகளில் உள்ள வீதிகளை காப்பெட் வீதிகளாக புனரமைக்கின்றனர். ஆனால் அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வீதிகளை புனரமைப்பு செய்யவில்லை.

குடிநீர் வழங்கல் சீராக இடம்பெறவில்லை. எமது பகுதிக்கான குழாய்வழி மூலமான குடிநீர் திட்டம் இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. ஒவ்வொரு தடவை கேட்டாலும் அதற்கு ஏதாவது சாட்டு கூறுகின்றனர்.

ஊரி பிரதான வீதியில் குடிநீர் வழங்கல் குழாய்களை புதைப்பதற்கான வரைபடத்தினை காண்பிக்கின்றனர். ஊரியில் எத்தனை கிராமங்கள் உள்ளன? அவற்றை எல்லாம் வரைபடத்தில் உள்ளடக்கவில்லை. கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ தண்ணீர் இல்லை.

அரசியல் பழிவாங்கல் செய்கின்றார்கள். எங்களை எதற்காக புறக்கணிக்கின்றீர்கள்? எமது பிரச்சினைகளை விரைவில் தீர்த்து வையுங்கள் என்றனர்.

அதற்கு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் பதிலளிக்க முற்பட்டபோதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக தமது கருத்துக்களை முன் வைத்தனர். இந்நிலையில் மூன்றுபேரை உள்ளே அனுப்புமாறு கூறிவிட்டு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளே சென்றனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் பிரதேச செயலகத்திற்கு வெளியே தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

1200-675-27101861-thumbnail-16x9-sdew

“மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை ஓரிரு நாள்களில் போய்ச் சேரும்; இதில் அரசியல் செய்ய வேண்டாம்!” – அமைச்சர் வன்னி அரசு உறுதி

September 18, 2026

விழுப்புரம்: மாவீரன் இரட்டைமலை சீனிவாசனின் நினைவுத் தினத்தையொட்டி திண்டிவனத்தில் அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த

1200-675-27660976-thumbnail-16x9-mou

தமிழ்நாட்டில் கால்பதிக்கும் அமெரிக்காவின் ‘வால்கிரீன்ஸ்’: முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

September 18, 2026

சென்னை: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச முன்னணி சுகாதார மற்றும் மருந்தக சேவை நிறுவனமான ‘வால்கிரீன்ஸ்’ (Walgreens), இந்தியாவில்

Edappadi-palanisamy-smile

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி 6 நாள்கள் தீவிரப் பிரச்சாரம்!

September 18, 2026

சென்னை: அடுத்த மாதம் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய இரண்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“பஞ்சாபில் 16 மணி நேர மின்வெட்டு; தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு இல்லை!” – அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்டம்

September 18, 2026

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப்

photo-collage.png (1)

மயில் தோகை விரிக்கும் இந்திய விமானப்படையின் ‘சாரங்’ சாகசக் குழு!

September 18, 2026

சாரங் (Sarang) என்பது இந்திய விமானப்படையின் (IAF) புகழ்பெற்ற வான்வழி சாகச ஹெலிகாப்டர் காட்சிக் குழுவாகும். உலகிலேயே ஐந்து ஹெலிகாப்டர்களைக்

sa

சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

September 18, 2026

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள்

cat

புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

September 18, 2026

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு

anojan

அனோஜன் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பது என்ன?

September 18, 2026

சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து

namal 22222222222

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் நாமல் கலந்துகொள்ளவேண்டியுள்ளது- பிணை மனுவில் வேண்டுகோள்

September 18, 2026

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது

Judment

இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

September 18, 2026

சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப்

phototune.ai_1789733534

எனது மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் – அனோஜனின் தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்

September 18, 2026

இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க

Judment

மட்டக்குளி கோர விபத்து: காரின் சாரதிக்கு விளக்கமறியல்

September 18, 2026

மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம்