சவூதி அரேபியா – ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் மோதல்

சவூதி அரேபியா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆகிய இரு தரப்புக்கும் இடையே மோதல் தீவிரமாகியுள்ளது. இந்த இருமுனைத் தாக்குதல்களில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (17) சவூதியின் தென்கிழக்கில் உள்ள தைப் நகர் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு 2 பேர் காயமடைந்துள்ளனர். அதேபோன்று, ஏமனில் ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தைஸ் நகரில் சவூதி அரேபியா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 4 […]
புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அமைந்துள்ள அந்திஸ் மலைகளும் அமேசான் படுகையும் சந்திக்கும் ‘யுங்காஸ்’ மேகக் காடுகளில், அறிவியல் உலகிற்கு இதுவரை அறியப்படாத முற்றிலும் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தற்கால உயிரியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய இனத்திற்கு ‘லியோபார்டஸ் தில்காயோ’ அல்லது ‘தில்காயோ டைகர் கேட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு நூற்றாண்டில் புதிய காட்டுப்பூனை இனம் ஒன்று உலகளவில் உத்தியோகபூர்வமாக விவரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். வீட்டுப் பூனையை விட அளவில் சிறியதான இந்த […]
அனோஜன் விவகாரம் – இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பது என்ன?

சவுதிஅரேபியாவில் ஈழத்தமிழர் அனோஜன் சிவராஜாவிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆஜராகியிருந்த அனோஜனின் சட்டத்தரணி அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட தண்டனை தற்போது மரணதண்டனையாக மாற்றப்பட்டுள்ளது என்பதை இலங்கை தூதரகத்திற்கு வாய்மூலம் அறிவித்துள்ளார். எனினும் சவுதிஅரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம் அந்த நாட்டின் நீதித்துறை அதிகாரிகளிடமிருந்து எழுத்து மூல அறிக்கைக்காக காத்திருக்கின்றது.அந்த அறிக்கை மூலமே உத்தியோகபூர்வ தீர்மானம் அதற்கான காரணங்கள் […]
இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் நாமல் கலந்துகொள்ளவேண்டியுள்ளது- பிணை மனுவில் வேண்டுகோள்

இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றிலும் பௌத்தமத நிகழ்வொன்றிலும் பொதுஜனபெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கலந்துகொள்ளவேண்டியுள்ளதால் அவருக்கு பிணைவழங்கவேண்டும் என அவரது சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கன்எயார்லைன்ஸ் விமானக்கொள்வனவு நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவேளை அவரது சட்டத்தரணிகள் சமர்ப்பித்த பினை மனுவில் நாமல் ராஜபக்ச இந்திய அரசாங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமல்ராஜபக்ச சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சமிந்திர பெர்னாண்டோ நாமல் ராஜபக்சவின் பிணை மனு முன்னர் […]
இருவருக்கு சொந்தமான 14 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்
சட்டவிரோதமான வழிகளில் உழைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், இருவருக்குச் சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது. குறிப்பிட்ட சந்தேகநபர்களில் ஒருவர் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் உழைத்த 900 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மற்றைய நபர் தணமல்வில பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் சட்டவிரோதமாக உழைத்த பணத்தில் கொள்முதல் செய்த 350 இலட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய ஜீப் வண்டியை முடக்குவதற்கு நடவடிக்கைகள் […]
எனது மகனை உயிருடன் மீட்டு தாருங்கள் – அனோஜனின் தாயார் ஜனாதிபதிக்கு உருக்கமான வேண்டுகோள்

இஸ்லாமிய மதத்தை நிந்தித்து கருத்து பதிவு செய்தமைக்காக சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராஜா அனோஜனின் தாயார் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது மகனை காப்பாற்ற முன்வரவேண்டும் என உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். அனோஜனின் தாயார் அந்த உருக்கமான வேண்டுகோளில் தெரிவித்துள்ளதாவது எனது மகன் அறியாமல் செய்த தவறை மன்னித்து இலங்கை அரசு மற்றும் ஜனாதிபதி தலையிட்டு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கை எடுத்து அனோஜனின் உயிரை காப்பாற்றி நாட்டிற்கு அழைத்து வர உதவவேண்டும் என்னுடைய மகனை ஒன்றும் செய்யாதீர்கள் […]
மட்டக்குளி கோர விபத்து: காரின் சாரதிக்கு விளக்கமறியல்
மட்டக்குளி பகுதியில் பல வாகனங்கள் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காரின் சாரதி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த காரின் சாரதி போதையில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்:

டொரன்டோ மேயர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் டக் ஃபோர்ட்: ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், டொரன்டோ மேயர் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் இதுவரை உத்தியோகபூர்வமாக ஆதரவு தெரிவிக்காத போதிலும், அவரது கொள்கைகளும் அரசியல் நடவடிக்கைகளும் இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. பிரதான மேயர் வேட்பாளர்கள் டக் ஃபோர்ட்டுடன் தங்களை எவ்வாறு நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, வாக்குகள் மட்டுமன்றி மாகாண மற்றும் நகர அரசாங்கத்திற்கு இடையிலான முக்கிய நிதி ஒதுக்கீடுகளும் தீர்மானிக்கப்படும் என அரசியல் […]
வரிகளுக்கு இடையே படித்துப் புரிந்து கொள்ளுங்கள்”: டொரன்டோ மேயர் தேர்தலில் ஒலிவியா சௌவிற்கு ஆதரவு உணர்த்தும் டக் ஃபோர்ட்

ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட், வரவிருக்கும் ஒக்டோபர் டொரன்டோ மேயர் தேர்தலை முன்னிட்டு தற்போதைய மேயர் ஒலிவியா சௌவிற்குத் தனது வலுவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். டொரன்டோவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய டக் ஃபோர்ட், ஒலிவியா சௌவின் தலைமையையும் மாகாண அரசாங்கத்துடனான அவரது கூட்டாண்மையையும் வெகுவாகப் பாராட்டினார். முக்கிய அம்சங்கள்: “அற்புதமான உறவு”: “மேயருக்கும் எனக்கும் இடையே ஒரு அற்புதமான உறவுமுறை உள்ளது. நாங்கள் மேயருக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம். அவர் நம்பமுடியாத அளவிற்குச் சிறப்பாகப் பணியாற்றுகிறார், எனவே வரிகளுக்கு […]
டொரன்டோ மேயர் தேர்தல் விவாதம்: சௌ, பிராட்போர்ட் மற்றும் அலெக்சாண்டர் இடையிலான மோதலின் 5 முக்கிய அம்சங்கள்

டொரன்டோ மேயர் தேர்தலுக்கான பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், ‘டெய்லி பிரட் ஃபூட் பேங்க்’ (Daily Bread Food Bank) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது நேரடி விவாதத்தில் முன்னணி வேட்பாளர்கள் மூவரும் கலந்துகொண்டனர். வறுமை, பொதுப் போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகியவை குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 1. வாழ்க்கைச் செலவு மற்றும் வரிகள் மீதான மோதல் (Battle over Affordability) ஒலிவியா சௌ: தனது ஆட்சியில் மாணவர்களுக்கான ஊட்டச்சத்து உணவுத் திட்டம் […]