‘டிலைட்’ படுகொலையின் பின்னணி

மாத்தறை – தேவேந்திர முனையில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, குறித்த நபருக்கு இருந்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே இடம்பெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இன்று பிற்பகல் 1 மணியளவில் மோட்டார் கார் ஒன்றில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதுடன், இந்தத் தாக்குதலில் 55 வயதான சிரில் ஹேந்தவித்தாரண என்ற “டிலைட்” என அழைக்கப்படும் மீன் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கியால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருக்குச் சொந்தமான ஹோட்டல் ஒன்றின் மீதும் 2023 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலையில், அவர் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் ரோந்துப் புத்தகம் ஒன்றும் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த நபரைப் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்த போதிலும், அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்துள்ளார். இன்றைய தினமும் அவர் கந்தரவிலிருந்து தெவிநுவரவிற்குச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளார்.

அவர் மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்ட நபரின் சகோதரரும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரைக் கொலை செய்வதற்காகத் துப்பாக்கிதாரிகள் மோட்டார் கார் ஒன்றிலேயே வந்துள்ளதுடன், அவரைக் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இதற்கமைய, சந்தேகநபர்களைக் கைது செய்வதப்பதற்காக 6 பொலிஸ் குழுக்களை ஈடுபடுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழ்நிலையில், கொலையாளிகள் வந்ததாகக் கூறப்படும் மோட்டார் கார் மாத்தறை, அமலகொட பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று கொல்லப்பட்ட சிரில் ஹேந்தவித்தாரண எனப்படும் “டிலைட்” என்பவரால் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் எல்லகந்த ஆரண்ய சேனாசனம் அமைந்துள்ள காட்டுப்பகுதியில், பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘தெவிநுவர தமிழ்’ என்பவரின் நெருங்கிய சகாவான ‘ஜுங்கய்யா லால்’ என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அந்தக் கொலையைத் தொடர்ந்து, ‘தெவிநுவர தமிழ்’ என்பவர் ‘டிலைட்’ தரப்பினரை இலக்கு வைத்து அவர்கள் பயணித்த வேன் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும், அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களுக்குக் குறித்த குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த போதிலும், மேன்முறையீட்டின் ஊடாக அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில், ‘டிலைட்’ என்பவர் ‘தெஹிகெதர பாலே’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடனும் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனால், பிற்காலத்தில் ‘தெஹிகெதர பாலே மல்லி’ என்பவரால் மேற்கொள்ளப்படும் ஹெரோயின் வர்த்தகத்தின் ஒரு பகுதியை ‘டிலைட்’ திருடியுள்ளதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த நபர் ‘தெஹிகெதர பாலே மல்லி’யின் எதிர்த் தரப்பான ‘உனக்குருவே சாந்த’ என்பவருடனும் தொடர்பைப் பேணியுள்ளதுடன், அதற்கமைய இரண்டு தரப்பினரதும் தகவல்களை இரு தரப்பிற்கும் வழங்கியமையினாலேயே இந்தக் கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் தற்போது சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கந்தர பிரதேசத்தில் உயிரிழந்த இந்த நபருக்கு மேலதிகமாக மேலும் 16 பேருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் காரணமாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பொலிஸார் தமது பாதுகாப்பை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்