சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி படுகொலை சாட்சியாளர் மாத்திரமேயன்றி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்பில்லாதவர் – சோமரத்னவின் மனைவி

டசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு முன்னர் அனுப்பிவைத்த கடிதம் மூலம் உங்களுக்கு அறியத்தந்து சுமார் ஒரு வருடம் கடந்திருக்கிறது. எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய ஒரு சாட்சியாளர் மாத்திரமேயாவார். எனவே இதுகுறித்து உங்களது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தாருங்கள் என வலியுறுத்தி மரணதண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளிடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.

அச்சந்திப்பினது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளித்த சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,

இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரமவினால் ஜுன் 4 ஆம் திகதியிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மீண்டும் மற்றுமொரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் எனது கணவர் உட்பட 5 இராணுவ வீரர்களுக்கு 1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் குற்றத்துடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு முன்னர் அனுப்பிவைத்த விரிவான கடிதத்தின் மூலம் உங்களுக்கு அறியத்தந்து சுமார் ஒரு வருடம் கடந்துள்ளது.

இதுகுறித்து உங்களது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எனக்கு அறியத்தருமாறும், எனது கணவர் செம்மணி படுகொலையை வெளிப்படுத்திய ஒரு சாட்சியாளர் மாத்திரமே என்பதுடன், அவர் 1996 இல் கைதுசெய்யப்பட்டு அன்று முதல் இன்று வரை தண்டனை அனுபவித்து வருவதனால், இதுகுறித்து ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

keerthana-xy-2026-08-23-14-35-56

“ரூ.4 கோடிக்கு வீடா? பத்திரத்தைக் காட்டுங்கள், அந்த வீட்டை உங்களுக்கே பரிசாகத் தருகிறேன்!” – அமைச்சர் கீர்த்தனா அதிரடி சவால்!

August 24, 2026

சிவகாசி சிவகாசியில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தான் ரூ.4 கோடிக்கு வீடு

dailythanthi_import_h-upload_2026_01_20_44548124-tcpgc

“100 நாள் ஆட்சியில் மக்களின் எண்ணங்களை த.வெ.க. அரசு பிரதிபலித்துள்ளது!” – ஜி.கே.வாசன் பாராட்டும் கோரிக்கையும்!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசின் 100 நாள் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பொறுப்புணர்வுகள் குறித்துத் தமிழ்

collage-down-31481787545581

“பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து!” – அரசியல் கட்சிகளின் ஆதரவும், பாஜகவின் அடுக்கடுக்கான கேள்விகளும்!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாகச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த முடிவுக்கு

proceedings

பேரவை அனுமதிக்கும் முன் அறிவிப்புகளை வெளியிடக் கூடாது – சபாநாயகர் அதிரடி உத்தரவு!

August 24, 2026

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய கட்டுப்பாடுகளைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

hindutamil-prod_2026-08-24_22cnkohu_Untitled

“கொளத்தூர் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்!” – தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தேர்தல் வழக்கு!

August 24, 2026

ன்னை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள்

Tamil_News_lrg_4303741

“முதல்வர் குறித்து அவதூறு!” – திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன் மீது சபாநாயகர் நடவடிக்கை!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் குறித்துப் பொதுவெளியில் அவதூறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ சந்திரசேகரன்

ctr-2025-12-22-14-41-49

“தொகுதிப் பக்கமே போகாத எம்.எல்.ஏ-க்களுக்கு அத்தனை கார் எதற்கு?” – திமுகவைச் சாடிய அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார்!

August 24, 2026

மதுரை மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட முத்தாங்குளம் கிராமத்திற்குப் புதிய பேருந்து வசதியைத் தொடங்கி வைத்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர்

1200-675-27217758-thumbnail-16x9-vanni-aspera

“சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க திமுக என்ன செய்தது?” – அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!

August 24, 2026

திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, திமுக மீதான விமர்சனங்கள், உதயநிதி

Parandur-Airport-2026-08-40023cdbed7b28a40fa3190b593f33ac

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து – முக்கிய அறிவிப்புகள்

August 24, 2026

வசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் (விதி 110-ன் கீழ்) முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள

anbumani

“2031-ல் பாமக தலைமையில் உறுதியாக ஆட்சி அமையும்!” – சேலத்தில் அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்!

August 24, 2026

சேலம் சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழாவில் கலந்துகொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வரும்

dailythanthi_2026-08-24_f2q30ykx_vijayone33

ஆண்டுக்கு 3 சிலிண்டர், அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்; பரந்தூர் விமான நிலையம் ரத்து – முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு!

August 24, 2026

சென்னை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று விதி

dead'

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் சடலம் மீட்பு: காவற்துறையினர் தீவிர விசாரணை!

August 24, 2026

யாழ்ப்பாணம், காரைநகர் வேரப்பிட்டி கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.