ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது

மக்கள் விடுதலை முன்னணி பயங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாளை சனிக்கிழமை மட்டக்களப்பில் புதிய பயங்கரவாத பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம், பயங்கரவாத தடைச்சட்டமும் வேண்டாம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை தமிழரசுக்கட்சி வழங்கவுள்ளதுடன் பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களும் ஆதரவு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகச் சொல்லி ஆட்சி வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதை விடுத்து பயங்கரவாதம் தடைச் சட்டத்தையும் விட மோசமான சட்டத்தை பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரிலே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையிலே இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கடந்த காலத்திலே நாங்கள் செயற்பட்டு வந்தோம். தொடர்ந்து வந்த அனைத்து அரசாங்களிடமும் பயங்கரதத் தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். அச்சட்டம் தேவையில்லை என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்ச்சியாக முன்வைத்து வந்தது.

கடந்த ரணில் விக்கிரமசிங்க காலத்திலும் ஏ.டி.ஏ என்ற பெயரிலே இதேபோல ஒரு சட்டம் கொண்டு வரப்பட்ட போது நாடு முழுவதும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரியும், பதிய சட்டம் தேவையிலை என்று கோரியும் கையெழுத்தப் போராட்டங்களை நாங்கள் நடத்தியிருந்தோம்.

கடந்த அரசாங்கம் சி.டி.ஏ என்ற பயங்கரவாத் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். நாங்கள் அனைவரும் போராட்டஙகளில் ஈடுபட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று போராட்டம் நடத்தியதும், அந்த சி.டி.ஏ சட்டத்தைப் பின்வாங்கியது. ஆனால் நடைமுறையில் இருக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கின்றது. அதே போன்று ரணில் விக்கிரமங்க காலத்தில் ஏ.டி.ஏ என்று சட்டம் கொண்டு வந்தார்கள் நாங்கள் போராடி அதனை வேண்டாம்.

கொண்டு வரப்பட இருந்த சட்டம் பின்வாங்கப்பட்டது. ஆனால் அதே பயங்கரவாதத் தடைச் சட்டம் அப்படியே இருக்கின்றது.

அதேபோல தான் இந்த பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்று புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நாங்கள் இதனை வேண்டாம் என்று சொல்லும் போது அரசாங்கம் இதனை வாபஸ் பெற்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கப் பார்க்கின்றார்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.

தற்போதை பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் ஒருவரை விசாரிப்பதானாலும், கைது செய்வதானாலும் உதவிப் பொலிஸ் அத்தியேட்சகர் பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது வர இருக்கும் புதிய சட்டத்தில் சாதாரண ஒரு போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கூட இந்த புதிய சட்டத்தினூடாகக் கைது செய்யக் கூடியதாக இருக்கின்றது. நாங்கள் இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் புதியதோ, பழையதோ அதற்கு முழுமையான எதிரானவர்கள்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியாக இருந்தபோது இந்தச் சட்டத்தை முழுமையாக எதிர்த்து இந்தச் சட்டம் கூட்டத்தைப் பகிஸ்கரிப்பார்கள். தமிழரசுக் கட்சி நாங்களாவது இச்சட்டத்தில் உள்ள் விடயங்கள் என்ன என்று அறியும் நோக்கில் கூட்டங்களில் கலந்து கொள்வோம். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி பங்கரவாதத் தடைச்சட்டம் வேண்டாம், புதிய சட்டமே வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார்கள். இன்று ஆட்சிக்கு வந்ததும் அவர்களே இதற்கு ஒரு மாற்றுச் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தார்.

bal

அதிமுக தென் மாநிலங்களுக்கு துரோகம் இழைக்கின்றது – மார்க்​சிஸ்ட் கட்​சி​

April 18, 2026

தொகுதி மறுவரையறை திட்​டத்தை ஆதரித்து தென் மாநிலங்​களுக்கு அதி​முக துரோகம் இழைப்​ப​தாக மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் கே.​பால​கிருஷ்ணன்

st

‘தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல் இருக்​கு’ – பிரேமலதா

April 18, 2026

“தமிழ்​நாடு முழுக்க ஒரே ஒரு குற்​றச்​சாட்டு தான் அண்​ணன் ஸ்டா​லின் மேல இருக்​கு. அதை​யும் இந்​தப் பெண்​கள் கூட்​டத்​தில் நான்

vij

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக விஜய் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு?

April 18, 2026

தேர்​தல் விதி​களை‌ மீறிய​தாக தவெக தலை​வர் விஜய் மீது 3 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். தவெக

bri

பிரித்தானியாவிலிருந்து இலங்கை மாணவி நாடுகடத்தப்படும் அபாயம்?

April 18, 2026

25 வயதான இலங்கை மாணவி நவோத்யா டி சில்வா (Navodya De Silva), தனது கல்விக்கட்டணத்தைச் செலுத்துவதில் ஏற்பட்ட ஒரு

Cr

இன்னிஸ்பில் பாலியல் கடத்தல் வழக்கு: வீடுகளில் போதைப்பொருள் மற்றும் பெண்கள் மீட்பு – பொலிஸார் சாட்சியம்

April 18, 2026

இன்னிஸ்பில் (Innisfil) பகுதியில் நடைபெற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில், பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர். சோதனையின்

se

வர்த்தகத்தில் கனடா ‘மிக மோசமான உத்தியைக்’ கொண்டுள்ளது: அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் சாடல்

April 18, 2026

வாஷிங்டனில் நடைபெற்ற ‘செமாஃபோர் உலகப் பொருளாதார உச்சிமாநாட்டில்’ (Semaphore World Economy summit) உரையாற்றிய அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட்

tru

ஈரானின் யுரேனியத்தை அமெரிக்கா எப்படியாவது கைப்பற்றும் – ட்ரம்ப் எச்சரிக்கை

April 18, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அமெரிக்கா “ஏதாவது ஒரு வழியில்” கைப்பற்றும் என்று

Ndb

NDB வங்கிக்கு சர்வதேச தடயவியல் கணக்காய்வு

April 18, 2026

தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) அண்மையில் வெளிப்படுத்திய உள்நாட்டு நிதி மோசடி குறித்து, சர்வதேச நிபுணர்களைக் கொண்ட முன்னனி நிறுவனம்

cham

சம்பிக்க ரணவக்கவின் தொலைபேசியை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

April 18, 2026

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கையடக்கத் தொலைபேசியை நீதிமன்ற உத்தரவின்படி, வரும் ஏப்ரல் 29-ஆம் திகதி நீதிமன்றத்தில்

is

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இஸ்ரேலிய இராணுவீரர் இலங்கையில்?

April 18, 2026

காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்க இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஹிந்த் ரஜப் அமைப்பு இது

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்