ஐரோப்பிய ஒன்றியம்-இலங்கை: 27வது கூட்டு ஆணையக் கூட்டம்

ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் இலங்கை ஆகியவை ஐரோப்பிய ஒன்றியம்- இலங்கை கூட்டு ஆணையக் கூட்டத்தின் 27வது அமர்வை கொழும்பில் 2026, பெப்ரவரி 12, அன்று, கூட்டின.

நட்பு மற்றும் திறந்ததொரு மனப்பாங்கின் அடிப்படையில் நடைபெற்ற இக்கூட்டம், இருதரப்பு உறவுகளை மீளாய்வு செய்து, ஆளுகை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் முதல் வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, கல்வி,மீன்வளம், கடல்சார் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, மீளனுமதி மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு வரையிலான இருதரப்பு ஆர்வமுள்ள பல்வேறு தலைப்புகளில் கருத்துகள் மற்றும் இற்றைப்படுத்தல்களைப் பரிமாறிக் கொண்டது.

இக்கூட்டம், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிக்க இரு தரப்பினருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், பரஸ்பர ஆர்வமுள்ள விடயங்களில் இரு தரப்பினரும் எடுத்த கொள்கைசார் சீர்திருத்தங்கள், நடைமுறை மேம்பாடுகள் மற்றும் சட்டரீதியான முயற்சிகள் குறித்த இற்றைப்படுத்தல்களை வலியுறுத்தியது.

2025, மே 5 அன்று நடைபெற்ற ஆளுகை, மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சி குறித்த ஐரோப்பிய ஒன்றிய- இலங்கை செயற்குழு, 2025, நவம்பர் 13 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த செயற்குழு மற்றும் 2026, பெப்ரவரி 11 அன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்த செயற்குழு ஆகியவற்றின் பணிகளை கூட்டு ஆணையம் ஆய்வு செய்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டமை நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் (OSA) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டமை, சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள், இலஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கருத்து மற்றும் சங்க சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயகம், நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் இலங்கையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கூட்டு ஆணையத்தின் கலந்துடையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சுயாதீன தேசிய நிறுவனங்கள், குறிப்பாக காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீட்டு அலுவலகம் (OR) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றால் ஆற்றப்படும் வலுப்படுத்தப்பட்ட வகிபாகம் குறித்தும் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தெரிவித்தது.

சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதிலும் நீக்குவதிலும், மீன்வளத் துறையில் உள்ள உறுதிமொழிகளை மதிப்பதிலும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். மேலும், எராஸ்மஸ்+ மற்றும் ஹொரைசன் ஐரோப்பா கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசித்தனர். சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ஒத்துழைப்பு, அத்துடன் புலம்பெயர்வு மற்றும் மீளனுமதிக் கொள்கைகள் குறித்தும் பயானுறுதிமிக்க பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

பாதுகாப்புத் துறையில், குறிப்பாக இந்து-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகளை இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்தன.

அடுத்த கூட்டு ஆணையக் கூட்டத்தை 2027 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸில் கூட்டுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்கு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிக்கான பதில் முகாமைத்துவப் பணிப்பாளர் திருமதி பாவோலா பம்பலோனி ஆகியோர் இணை தலைமை தாங்கினர்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.