சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தமிழக அரசியல் களத்தில் அதிரடியைக் கிளப்பியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்துத் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். சட்டசபை செயலாளர் சாந்தியும் இந்நிகழ்வின் போது உடன் இருந்தார்.
இந்த ராஜினாமா முடிவுக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பாக, தனது எக்ஸ் தளத்தில் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடி சி.விஜயபாஸ்கர் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. \”தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு. உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை மக்களின் மனதை எப்படி வெல்லும்?\” என அவர் பதிவிட்டிருந்தது கட்சிக்குள் நிலவும் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஏற்கனவே தவெக-வில் நான்கு எம்.எல்.ஏ.க்கள் இணைந்த நிலையில், ஐந்தாவது எம்.எல்.ஏ.வாக சி.விஜயபாஸ்கர் பதவி விலகியிருப்பது அதிமுக-வின் பலத்தை 42 ஆகக் குறைத்துள்ளது. இவரது கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், அதனைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அங்கு இடைத்தேர்தலுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக-வின் தொடர் சரிவு மற்றும் முன்னாள் அமைச்சர்களின் வெளியேற்றம் அக்கட்சியின் எதிர்காலத்தை அடியோடு கேள்விக்குறியாக்கியுள்ளது.
#CVVijayabaskar #AIADMK #EPS #MLA #Resignation #ViralaiMalai #Politics #TamilNadu #Vijay #TvkGovernment #ThalapathyVijay #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #AdmkCrisis #TamilNaduPolitics #PoliticalRebellion #AdmkLeadership #SofaModelGovernment #Politics2026 #PoliticalShakeup #TamilNaduNews #Election2026