இலங்கையில் 12 மாதகாலத்தில் 89 மத அடிப்படையிலான மீறல்கள்

இலங்கையில் கடந்த 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப்பகுதியில் மத அடையாளத்தின் அடிப்படையில் 89 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும், தரவுகளின் பிரகாரம் கிறிஸ்தவ மற்றும் இந்து மதங்களைச் சேர்ந்தவர்களே இக்காலப்பகுதியில் அதிகம் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2024 நவம்பர் – 2025 ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் பதிவான மத சுதந்திர மீறல்கள் தொடர்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவின் ‘இணைப்பாதைகளில் உரிமைகள் : இலங்கையில் இடம்பெற்ற மத ரீதியான தாக்குதல்கள் பற்றிய சட்ட ஆய்வு’ எனும் தலைப்பிலான ஆய்வறிக்கை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (14) வெளியிடப்பட்டது.

அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள தரவுகளின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட 12 மாதகாலத்தில் மத மற்றும் நம்பிக்கை சுதந்திரத்தை மீறும் வகையிலான 29 சம்பவங்களும், 19 பிரிவினைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தப் பிரிவினைச் சம்பவங்களில் பெரும்பாலானவை வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்யுமாறு கோரி மேற்கொள்ளப்பட்டவையாகும். அதேபோன்று அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களுடன் தொடர்புடைய 15 சம்பவங்களும், 5 பொதுச்சொத்து சேத சம்பவங்களும், உடலியல் ரீதியான வன்முறைச் சம்பவங்கள் 4 உம் பதிவாகியுள்ளன.

அதேவேளை இக்காலப்பகுதியில் கிறிஸ்தவர்களும் இந்துக்களுமே அதிகளவில் இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அதன்படி கிறிஸ்தவர்களுக்கு எதிராக 58 தாக்குதல் சம்பவங்களும், இந்துக்களுக்கு எதிராக 22 தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வாறான 15 சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அறிக்கையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதேபோன்று இத்தாக்குதல்கள் மற்றும் மீறல்களின் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி நோக்குகையில், அவற்றில் அரச தரப்பினரின் பங்களிப்பு உயர்வாகக் காணப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பொலிஸாரின் பங்களிப்புடன் 36 மீறல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதுடன், ஏனைய அரச அதிகாரிகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களினாலும் மத சுதந்திரத்துக்கு இடையூறு விளைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உடலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் சொத்துச்சேதங்கள் போன்ற சம்பவங்களை நிகழ்த்தியவர்கள் தனிநபர்களேயாவர்.

மேலும் மாவட்ட ரீதியாக நோக்குகையில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான சம்பவங்கள் (15) பதிவாகியிருப்பதுடன், அதற்கு அடுத்ததாக கிளிநொச்சி (12) மற்றும் திருகோணமலை (11) ஆகிய மாவட்டங்களில் மத ரீதியிலான மீறல்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இத்தகைய மத அடிப்படையிலான வன்முறைகள் மற்றும் மீறல் சம்பவங்கள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு இணையவெளியில் மத ரீதியான பதற்றங்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக எச்சரிக்கை முறைமைகளை உருவாக்கல், சமூக ஊடகங்களைக் கண்காணித்தல் மற்றும் சட்ட ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷ (எவாஞ்சலிக்கல்) கூட்டிணைவு அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என