இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை?

முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவாக வழங்கப்படும் என கடந்த மாதம் வெகுசன ஊடக பிரதியமைச்சரால் தம்மிடம் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (07.05.2026) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடமே நாடாளுமன்ற உறுப்பினர் இதனை குறிப்பிட்டார்.

இத்தகைய சூழலில் முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2026.04.08 அன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் முல்லைத்தீவு மற்றும் மன்னாருக்குரிய அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்கள் தொடர்பில் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் மிகவும் விரைவாக மேற்படி வாகனங்கள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழங்கப்படுமென வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவால், 08.04.2026 அன்றைய நாள் மாலையில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய மன்னாருக்கு உடனடியாக குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்பட்டபோதும் முல்லைத்தீவிற்கு வாகனம் வழங்கப்படுவதில் ஒரு மாத காலமாக தொடர்ந்தும் இன்றுவரை இழுபறிநிலை நீடித்துவருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படுவதிலுள்ள இழுபறிநிலை தொடர்பாக 07.05.2026இன்று நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினாநேரத்தில் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.

அந்தவகையில் மாகாண அளவிலான அஞ்சல் சேவை வழங்கலில் முல்லைத்தீவு சமத்துவ நிலையில் இன்று வரை அணுகப்படவில்லை. அதற்கு முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இதுவரை அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்கப்படாமை ஒரு சான்று என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வெகுசன ஊடக அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு முல்லைத்தீவிற்கு அஞ்சல் பரிவர்த்தனைக்காக வழங்கப்பட்ட வாகனம் திருத்த வேலைகள் நிறைவுசெய்யப்பட்டபோதும் யாழ்ப்பாணத்தில் இருப்பதாக அறியமுடிவதாகவும் தெரிவித்தார்.

எனவே காலதாமதமின்றி, வவுனியாவில் இருந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனையை மேற்கொள்வதற்குரிய அந்த வாகனத்தை வழங்குவதற்கு வெகுசன ஊடக அமைச்சரின் விசேட தலையீட்டை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரினார்.

இந்நிலையில் அஞ்சல் பரிவர்த்தனைக்கான வாகனங்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அஞ்சல் பரிவர்த்தனை வாகனங்களை புதிதாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அதற்கென வரவுசெலவுத்திட்டங்களல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவிற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனத்தின் பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், குறித்த அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் விரைவில் முல்லைத்தீவுக்கு அனுப்பப்படுமெனவும் வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கௌஷல்யா ஆரியரத்ன நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேற்படி விடயத்தில் வெகுசன ஊடக பிரதி அமைச்சரின் விசேட தலையீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நன்றியைத் தெரிவித்ததுடன், கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அல்லது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு வரும் வகையில் அஞ்சல் பரிவர்த்தனையில் இன்னும் இழுபறி நிலை இருப்பதாக பிரதி அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

எனவே முன்னரே திட்டமிட்டதற்கு அமைவாக வவுனியாவில் இருந்து முல்லைத்தீவுக்கு மேற்படி பரிவர்த்தனை வாகனம் வரும் வகையில் பிரதி அமைச்சர் விசேட தலையீட்டோடு விரைவாக அதனை உறுதிப்படுத்தித் தருமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அஞ்சல் பரிவர்த்தனை வாகனம் வழங்குதல் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அஞ்சல் அலுவலகப் பதிலாளிகளின் நியமனந் தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெகுசன ஊடக பிரதி அமைச்சருக்கு 07.05.2026இன்று கோரிக்கைக் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

amma_Mu

யாழில் இருந்து வவுனியா சென்ற யுவதி ஒருவரை காணவில்லை

May 14, 2026

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த

amma_Mu

மூதூர் அம்மன்நகர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

May 14, 2026

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு – அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வை

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி