வாக்குறுதியை அரசு மீறிவிட்டது; மன்னாரில் கனிம மணல் அகழ்வு!

மன்னார் பகுதியில் கனிம மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை ஜனாதிபதியும் தற்போதைய அரசாங்கம் முற்றாக மீறியுள்ளது என்று சுற்றுச்சூழல் பொருளாதார பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி சுவஸ்திகா அருளிங்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (17) கைத்தொழில் அமைச்சிடம் கனிம மணல் அகழ்வுக்கு எதிரான கோரிக்கைகளை முன்வைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார் கற்றாலைத் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராடிய போது, நாட்டின் சமயத்தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி மக்கள் கற்றாலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், மன்னாரில் கனிம மணல் அகழ்வுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதிலும், தற்போது அந்த வாக்குறுதிகளைப் புறந்தள்ளிவிட்டு, சுற்றுச்சூழல் ரீதியாக எளிதில் பாதிக்கப்படக்கூடிய மன்னார் மாவட்டத்திலேயே இந்த ஆபத்தான கனிம மணல் அகழ்வுக்கான முதலாவது திட்டத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையின் கடற்கரைப் பரப்பளவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு பகுதியில் அகழ்வு மற்றும் தேடல் பணிகளுக்காக 300க்கும் அதிகமான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல அனுமதி பத்திரங்கள் ஏற்கனவே சுரங்க அகழ்வு அனுமதி பத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த அகழ்வுப் பணிகளால் கடற்கரையை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள், நிலத்தடி நீரை நம்பியிருக்கும் விவசாயிகள் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, இலங்கைக் கடற்கரையை நாடி வரும் அழிந்துவரும் உயிரினங்களான கடல் ஆமைகள் போன்ற பல்லுயிர்களும் முற்றாக அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த அகழ்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள ‘கேபிட்டல் மெட்டல்ஸ்’ போன்ற நிறுவனங்கள், முன்னதாக லைபீரியாவில் சுரங்க வணிகத்தில் ஈடுபட்டிருந்தபோது முழு கிராமங்களையே பலவந்தமாக அப்புறப்படுத்தி கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவை, இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு பேரவை வரை அந்நாட்டின் விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து தற்போது இலங்கையின் பொருளதார நிலையைப் பயன்படுத்தி கடற்கரை வளங்களைச் சுரண்ட அவை அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, இதற்காக முதலீட்டுச் சபைக்கு 15 நிறுவனங்கள் தங்களது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ள போதிலும், இதற்கான கோரிக்கைகள் எதுவும் கோரப்படாமல், எவ்வித வெளிப்படைத்தன்மையும் இன்றியே இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொருளாதார ரீதியாகப் பார்த்தால், இந்த ஒட்டுமொத்த திட்டத்திற்குமாக 1,000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே முதலீடாகக் கிடைக்கவுள்ளது. ஆனால், இலங்கையின் சாதாரண ஒரு வருட தென்னை ஏற்றுமதி வருமானம் மட்டுமே 1,200 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதாவது, ஒரு வருட தென்னை ஏற்றுமதி மூலம் பெறக்கூடிய வருமானத்தை விடக் குறைவான தொகையையே ஒட்டுமொத்த கடற்கரையையும் அழித்துப் பெறவுள்ளனர். இவ்வளவு அழிவுகளுக்கு மத்தியில் தற்போது நாட்டிற்குள் வந்துள்ள உண்மையான முதலீட்டுத் தொகை வெறும் 9.96 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே. கடந்த காலங்களில் தாங்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த போதெல்லாம், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அலட்சியப்படுத்தியவர்களின் கண்கள் இப்போது திறக்கப்பட வேண்டும்; ஏனெனில், கடந்த காலங்களின் அனைத்துக் கணிப்புகளும் இன்று உண்மையாகி நிற்கின்றன.

மேலும், நாட்டிற்குப் பிரம்மாண்ட முதலீடு கிடைக்கும் எனக்கூறப்பட்ட போர்ட் சிட்டியின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு சீனாவுக்குச் சென்றுவிட்ட நிலையில், இலங்கையின் வசம் உள்ள நிலப்பகுதியில் எந்தவொரு முதலீடுகளும் நடக்காமல் வெறும் குதிரையோட்டப் பந்தயம் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், உள்நாட்டுத் தேசியக் கடன் மறுசீரமைப்பிற்காக உழைக்கும் சாதாரண மக்களின் ஊழியர் சேமலாப நிதியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பலமுறை கூறியும் அரசாங்கம் அதையும் பொருட்படுத்தவில்லை, இன்றுவரை சாதாரண தொழிலாளர்களின் சேமிப்பிலிருந்து பணம் வெளியேறிக்கொண்டிருக்க, தனியார் வங்கிகளின் இயக்குநர்களும், பங்குதாரர்களும் மட்டுமே இலாபத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

gna

யார் ஆட்சி செய்தாலும் பௌத்த துறவிகளின் வரலாற்று ரீதியான பங்களிப்பில் தலையிட வேண்டாம் – கலகொட அத்தே ஞானசார தேரர் 

July 27, 2026

இன்று நடைபெறவுள்ள மகா சங்க மாநாடானது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக நடத்தப்படுவதாகக் கருதினால், அது தவறானதாகும். அரசாங்கங்களை ஆட்சிக்குக் கொண்டுவருவது மக்களின்

Screenshot_20260726_231847_WhatsApp

ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் சசி தரூர் – “வரலாறு அவருக்கு நியாயம் வழங்கும்” என புகழாரம்!

July 27, 2026

இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், இலங்கைக்கான தனது விஜயத்தின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதி

4

சிவகாசி பட்டாசு விபத்து: உயிரிழப்பு 5 ஆக உயர்வு!

July 27, 2026

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் ராம் பிரகாஷ் என்பவர் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசுகள்

3

ஊழல் பட்டியல் எப்போது வெளியீடு? – அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்!

July 27, 2026

சென்னை: சென்னை பிராட்வேயில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2

ரூ.1,34,166 மதிப்புள்ள செயற்கைக்கோள் தொலைபேசியை 74 மீனவர்களுக்கு வழங்கிய அமைச்சர் ஸ்ரீநாத்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 74 ஆழ்கடல் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசிகள்

Ravikaran

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அநுரவை இரு கரம் கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டேன் ; இனி எப்படிக் கேட்பது எனத் தெரியவில்லை – ரவிகரன் ஆதங்கம்!

July 27, 2026

சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம்,

1

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட கர்நாடகா வைக்க முடியாது: அமைச்சர் செங்கோட்டையன்!

July 27, 2026

ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அளுக்குளி பகுதியில் நடைபெற்ற ‘உங்களை தேடி நாங்கள்’ திட்ட முகாமை வருவாய்த்துறை மற்றும்

SHOOTING

தீவிரமடையும் பாதாள உலக வன்முறைகள்

July 27, 2026

இவ்வருடத்தில் இதுவரை இலங்கையில் 22 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும்

45925fe0-d767-44cd-9b26-f62575fc384f.jpg

சீயட்ல் சென்டர் துப்பாக்கிச் சூடு: சிறுவன் உட்பட இருவர் பலி, குறைந்தது ஐவர் காயம்

July 27, 2026

ஞாயிற்றுக்கிழமை இரவு சீயட்ல் சென்டரில் (Seattle Center) முக்கிய உணவுத் திருவிழா நடைபெற்றுக்கொண்டிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்

BGWK6B54S5E3PJ37A4S5J7SH7Y

‘இங்கே ஒரு குழப்பமான சூழல் நிலவியது’: வாட்டர்லூ பல்கலைக்கழகப் பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் விசாரணை; நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

July 27, 2026

வாட்டர்லூவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 31 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இது நடப்பாண்டில் அப்பகுதியில் பதிவான

XRIJV6PPMZA57CCRZJQHBIDLBY

ஸ்கார்பரோவில் சாஸ் தெளித்து கவனம் சிதறடித்துத் திருடிய சந்தேக நபர்களின் புதிய புகைப்படங்களை பொலிஸார் வெளியீடு

July 27, 2026

ரொறன்ரோ பொலிஸார், கவனம் சிதறடிக்கும் திருட்டுச் சம்பவத்தின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டவரின் மீது சந்தேக நபர் ஒருவர் ‘கெட்சப்’ (Ketch-up

XHFAYQV4L5FSHADV33MY3MBVHY

மின்சார ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து: 11 வயது சிறுவன் படுகாயம், சாட்சிகளைத் தேடும் ரொறன்ரோ பொலிஸார்

July 27, 2026

11 வயது சிறுவன் ஒருவன் தனது மின்சார ஸ்கூட்டரின் (e-scooter) கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதியதில்