வட பகுதி மக்களின் நம்பிக்கையை பாதுகாப்போம் – அமைச்சர் சந்தன அபேரத்ன உறுதி!

வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை  முழுமையாக  பாதுகாப்போம்.மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை . சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தைக் கட்டியழுப்புவோம்  என பொது நிர்வாகம், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர்  சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வட மாகாண மக்கள் இதுவரை காலமும் பிறப்பு,திருமணம்,இறப்புச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பில் உள்ள பிரதான ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டியிருந்த அசௌகரியத்திற்கு  தீர்வு காணும் வகையில், பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்குச் சொந்தமான வடக்கு பிராந்திய ஆவணக் காப்பகம்  நேற்று வியாழக்கிழமை  (30) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

பொது நிர்வாக,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் ஆகியோரின் தலைமையில் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் உள்ள ஏ9 வீதி, மன்னக்குளத்தில் இந்நிகழ்வு நடைபெற்று மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரதான நிர்வாக மற்றும் அன்றாடப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முறைப்படுத்துவது தொடர்பான முதன்மை விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்  சந்தன அபேரத்ன, இதுவரை காலமும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் கொழும்பு மாளிகாவத்தை ஆவணக் காப்பகத்திற்குச் செல்ல வேண்டியிருந்ததால், மக்களுக்குப் பல நாட்கள் விரயமானதுடன், போக்குவரத்து மற்றும் தங்குமிடத்திற்காகப் பெருமளவு பணத்தை செலவிட வேண்டியிருந்தது.

இந்நி்லையில், இந்த புதிய பிராந்திய ஆவணக் காப்பகம் நிறுவப்பட்டதன் மூலம் மக்களின் நேரமும் பணமும் சேமிக்கப்படுவதோடு, அப்பகுதியின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் விவசாயத்திற்கும் ஏற்பட்ட தடைகள் முற்றாக நீக்கப்படும்.மேலும், இந்த அலுவலகத்தை மையமாகக் கொண்டு மன்னக்குளம் பகுதியில் ஒரு சிறிய நகரம் உருவாக்கப்பட்டு, அப்பகுதி மக்களுக்குப் புதிய வணிக மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் பல உருவாகும்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவிய யுத்தத்திற்கு நிர்வாக அதிகாரங்களும் சேவைகளும் பரவலாக்கப்படாமையும் ஒரு காரணியாக அமைந்தது.இத்தகைய நடவடிக்கைகளை பல ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டிருந்தால் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களைக் குறைத்திருக்க முடியும்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்,யுத்தத்தினால் இழக்கப்பட்ட காணி உரிமைகளை மீள வழங்கி தீர்த்து வைக்கும் விசேட திட்டமும், சேதமடைந்த வீடுகளுக்காகப் புதிதாக 13,000 வீடுகளைக் கட்டுவதற்கான திட்டமும் கலந்துரையாடல் மட்டத்தில் உள்ளன.

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கால்நடைகளைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையின் மூலம் உரிமையை உறுதிப்படுத்தி, அரசாங்கக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.கடந்த தேர்தல்களில் வட பகுதி மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையை நூற்றுக்கு நூறு சதவீதம் பாதுகாத்து, மீண்டும் ஒருபோதும் இனவாத அல்லது மதவாத மோதல்கள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை. சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு இலங்கைத் தேசியத்தைக் கட்டியழுப்புவோம்.

மேலும், இந்த ஆவணக் காப்பகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பணிகளுக்காக அரசாங்க நிதியுதவி மற்றும் கணினிகள் உள்ளிட்ட பௌதிக வளங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளையில், ஒட்டுமொத்த அரச சேவையிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த ஆண்டில் நிர்வாக சேவைக்கு 2000 க்கும் மேற்பட்டோரையும் 30,000 ஆசிரியர்களையும் ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், பதிவாளர் நாயகம் எஸ். ஜனதீபன் உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள், வவுனியா மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும்  பொதுமக்கள் கலந்துக்  கொண்டனர்.

5

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைகிறேனா? ஓபிஎஸ் தரப்பு விளக்கம்!

July 31, 2026

சென்னை: சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளியான தகவல்களை அவரது தரப்பு

4

வடலூர் வள்ளலார் பன்னாட்டு மைய திட்டம் கைவிடப்பட்டது வரவேற்புக்குரியது – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

July 31, 2026

சென்னை: வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள சத்திய ஞானசபை வளாகத்துப் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாகச் சென்னை

df

பாகிஸ்தானில் நிலக்கரிச் சுரங்க விபத்தில் 32 தொழிலாளர்கள் உயிரிழப்பு

July 31, 2026

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட பயங்கர வாயு வெடிப்பில் குறைந்தது

r

புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன!

July 31, 2026

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து புதிய தகவல் தொடர்பு தொழில்நுட்பச் சோதனை செயற்கைக்கோள்கள் நேற்று வியாழக்கிழமை

tn

இலங்கைத் தமிழரசுக் கட்சி மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

July 31, 2026

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த

v

நெல்லியடி பிரதேசத்தில் மர்ம பொதிகள் மீட்பு

July 31, 2026

வடமராட்சி – நெல்லியடி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 16 kg கேரள கஞ்சா

trum

சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு வழங்கும் நிதியை முழுமையாக நிறுத்தியது அமெரிக்கா

July 31, 2026

அமெரிக்கா சர்வதேச தடுப்பூசி கூட்டமைப்புக்கு 600 மில்லியன் டொலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அதன்மூலம் உலக சுகாதார அமைப்புக்கு

hea

இலங்கைக்கு ஏற்படவுள்ள கடுமையான பாதிப்பு

July 31, 2026

எல் நினோ நிலைமையின் தாக்கம் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எதிர்பாராத பாதிப்பு ஏற்படலாம் என சிரேஷ்ட பேராசிரியர் புத்தி

Pol

பொலிஸார் தொடர்பாக கடுமையாகும் சட்ட நடவடிக்கை

July 31, 2026

பொதுமக்களை துன்புறுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்து கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு எதிராக கடுமையான

3

கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகிறதா? – வேல்முருகன் ஆவேச கேள்வி!

July 31, 2026

சென்னை: காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளையும் தொடர்ந்து அவமதித்து வரும் கர்நாடக அரசுக்கு,

Shakthivel

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை எமக்கு நீதி கிட்டப் போவதில்லை

July 31, 2026

தமிழர்களின் அரசியல் விடயத்தில் சட்டமும் நீதியும் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் கைகளில் தவழும் வரை தமிழர்களுக்கு நீதி கிட்டப் போவதில்லை

2

சிவப்பு + மஞ்சள் = காவி என்பது உறுதியாகிவிட்டது: தவெக அரசை கடுமையாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்!

July 31, 2026

சென்னை: நீட் தேர்வு மற்றும் இ.டபிள்யூ.எஸ் (EWS) இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தித் திராவிடர் கழகம் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த இருசக்கர