பெண்ணுரிமை குறித்து அதிருப்தி: பிரித்தானியப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் பதவி துறப்பு!

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமையிலான அரசாங்கத்தில் பொதுப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஜெஸ் பிலிப்ஸ், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தில் பிரதமரின் செயல்பாடுகள் குறித்து அவர் முன்வைத்துள்ள விமர்சனங்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி கடிதத்தில்,”பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் பிரதமருடன் நான் பல ஆண்டுகளாக நெருக்கமாகப் பணியாற்றியுள்ளேன்.

இந்தச் சமூகச் சீர்கேட்டைச் சரிசெய்ய வேண்டும் என்ற உண்மையான விருப்பம் பிரதமரிடம் இருப்பதை நான் அறிவேன். இருப்பினும், இந்தத் துறையில் உண்மையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் எப்போதுமே என்னால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்குப் பிறகே நிகழ்ந்தன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டான சூழல்களைப் பயன்படுத்தி பெண்களுக்கான உரிமைகளை முன்னெடுக்க தான் முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஸ்டார்மரை நோக்கி நேரடியாகக் கருத்து தெரிவித்துள்ள அவர், “நீங்கள் அடிப்படையில் ஒரு நல்ல மனிதர், சரியான விஷயங்களில் அக்கறை கொண்டவர் என்று நான் நினைக்கிறேன்.இருப்பினும், அது மட்டுமே போதுமானதல்ல என்பதை நான் நேரடியாகக் கண்டுள்ளேன்.

எங்கே விவாதம் வந்துவிடுமோ என்ற அச்சத்தால் நாம் எந்தவொரு வாதத்தையும் முன்வைப்பதில்லை. இதனால் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் முடங்கிப் போகின்றன,” என்று சாடியுள்ளார்.

கண்ணியமும் ஆர்வமும் அரசியலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குப் போராடும் குணமும் வேகமும் அவசியம் என்று ஜெஸ் பிலிப்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்ப்புகளை எதிர்கொள்ளுங்கள், வாதங்களை முன்வையுங்கள், மக்களை உங்களோடு அழைத்துச் செல்லுங்கள். அரசியல் என்பது வெறும் கொள்கைகள் சார்ந்தது மட்டுமல்ல, அது மக்களின் உணர்வுகளோடும் தொடர்புடையது,” என்று அவர் கூறியுள்ளார்.

தொழிற்கட்சி அரசாங்கம் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ள அவர், ஆனால் நாடும் தானும் எதிர்பார்த்த மாற்றங்கள் தற்போதைய தலைமையின் கீழ் நிகழவில்லை என்பதால், அமைச்சராகத் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை எனக் கூறி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.

உள்ளூர் தேர்தல் தோல்வி மற்றும் கட்சிக்குள் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், ஒரு அமைச்சரின் இந்த பகிரங்கமான விமர்சனங்களுடன் கூடிய பதவி விலகல் பிரதமர் கீர் ஸ்டார்மருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Sarath

இன்று இருப்பது ஒரு கார்ட்டூன் எதிர்க்கட்சி”: மார்ஷல்சரத் பொன்சேகா கருத்து!

June 15, 2026

ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்கி வரும் தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்குவதாகப் மார்ஷல் சரத் பொன்சேகாகுறிப்பிட்டுள்ளார்.

dead'

புலத்சிங்களவில் உள்ள ஆடைவிற்பனை நிலையத்திற்குள் தம்பதியினர் சடலங்களாக மீட்பு!

June 15, 2026

புலத்சிங்கள: களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள பகுதியில் உள்ள ஆடைவிற்பனை நிலையம் (Clothing store) ஒன்றிற்குள் கணவன் மற்றும் மனைவி ஆகிய

suresh11

சுரேஷ் சல்லேயை தினமும் சந்திக்க சட்டத்தரணிக்கு சிஐடி மறுப்பு: குடும்பத்தினருக்கு அனுமதி!

June 15, 2026

கொழும்பு: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் வைக்கப்பட்டிருந்த போது முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தற்போது கொழும்பு தேசிய

722205477_122297438792194641_4474599319675497240_n

ரொறன்ரோ டென்போர்த் பகுதியில் தொடர் தாக்குதல்: நபர் மீது 12 குற்றச்சாட்டுகள் — பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

June 15, 2026

ரொறன்ரோ: கனடாவின் ரொறன்ரோ நகரில் உள்ள கொக்ஸ்வெல் அவென்யூ (Coxwell Avenue) மற்றும் டென்போர்த் அவென்யூ (Danforth Avenue) சந்திப்புப்

wi

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை

June 15, 2026

நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் தீவிர தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக, பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்

j

உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

June 15, 2026

வனாதவில்லுவ, மயிலங்குளம் பகுதியில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்ததில், அதன் ஓட்டுநர் துரதிர்ஷ்டவசமாக அதன்

Elnino

இலங்கையைப் பாதித்துள்ள எல் நினோ காலநிலை

June 15, 2026

இலங்கையைப் பாதித்துள்ள ‘எல் நினோ’ காலநிலை நிலைமை காரணமாக, எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் சில பகுதிகளில்

chemma

சோமரத்ன ராஜபக்ஷ செம்மணி படுகொலை சாட்சியாளர் மாத்திரமேயன்றி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் தொடர்பில்லாதவர் – சோமரத்னவின் மனைவி

June 15, 2026

டசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் எனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பது பற்றி இதற்கு

Legents

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

June 15, 2026

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து

us

ஜூன் -19 இல் அமெரிக்காவுடன் ஈரான் சமாதான உடன்படிக்கை கைச்சாத்து!

June 15, 2026

அமெரிக்காவுடனான சமாதான உடன்படிக்கை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில் கையெழுத்திடப்படும் என சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான ஈரானிய துணை வெளியுறவு

kopp

கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய கட்டடத்திற்கு மாற்றம்

June 15, 2026

கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்காக அனைத்து வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்

exa

பெறுபேறுகளில் தாமதம்

June 15, 2026

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தாமதமடையக்கூடும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பேச்சாளர்