டொராண்டோவில் இரண்டு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்: சந்தேக நபரைத் தேடும் பொலிஸார்

டொராண்டோவில் இடம்பெற்ற இரண்டு பாலியல் வன்கொடுமை விசாரணைகள் தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண டொராண்டோ பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். முதலாவது சம்பவம்: மே 10, 2026 அன்று மாலை 5:30 மணியளவில் டண்டாஸ் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Dundas Street West) மற்றும் ப்ளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் (Bloor Street West) பகுதியில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. வணிகக் கட்டிடம் ஒன்றிற்குள் இருந்த பெண்ணொருவரைப் பின்தொடர்ந்து அலுவலகப் பகுதிக்குள் சென்ற இனந்தெரியாத நபர், […]
கபில சந்திரசேனவின் கையடக்கத் தொலைபேசியைத் சோதனையிடுவதற்கு பொலிஸார் நீதிமன்ற அனுமதியைக் கோருகின்றனர்

2026 மே 12 | இரவு 7:04 மணி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, செவ்வாய்க்கிழமை (12) கொழும்பு கோட்டை நீதவான் பாசான் அமரசேகர முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) அதிகாரிகள், இந்த விசாரணையில் இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து நீதிமன்றத்திற்குத் தெளிவுபடுத்தியதுடன், பிரேத பரிசோதனை தொடர்பான மேலதிக ஆவணங்களையும் அறிக்கைகளையும் சமர்ப்பித்தனர். விசாரணையின் போது CCD அதிகாரிகள் முன்வைத்த முக்கிய […]
தென் மாகாணத்தில் பாரிய சுற்றிவளைப்பு: 220-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது

தென் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான சுற்றிவளைப்புகளின் போது, சைபர் குற்றங்கள் மற்றும் குடிவரவு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 220-க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை (11) மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளின் போதே இந்த கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மிதிகம பகுதியில் 33 பேர் கைது மிதிகம, பின்வத்தை பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 28 இந்தியர்கள் மற்றும் 5 […]
நோர்த் யோர்க் வாகன தரிப்பிடத்தில் கார் மோதி பாதசாரி பலி

செவ்வாய்க்கிழமை காலை நோர்த் யோர்க் பகுதியில் உள்ள வாகனத் தரிப்பிடம் (Parking lot) ஒன்றில் கார் மோதியதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச்ம்பவம் காலை 10:40 மணியளவில் டொன் மில்ஸ் வீதி (Don Mills Road) மற்றும் லோரன்ஸ் அவென்யூ (Lawrence Avenue) சந்திப்பிற்கு அருகில் இடம்பெற்றதாக டொராண்டோ பொலிஸார் சமூக வலைதளப் பதிவொன்றில் தெரிவித்துள்ளனர். பொது வீதிகள் எதுவும் மூடப்படவில்லை என்றும், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கியிருந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு […]
வோன் பகுதியில் விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு; டப்ரின் வீதி தற்காலிகமாக மூடல்

மே 12 செவ்வாய்க்கிழமை அன்று வோன் (Vaughan) பகுதியில் உள்ள டப்ரின் வீதி (Dufferin Street) மற்றும் கரவே டிரைவ் (Caraway Drive) சந்திப்புக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹைவே 407-க்கு (Highway 407) சற்று தெற்கே உள்ள பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலை 10:15 மணியளவில் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டதாக யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional […]
பிராம்ப்டனில் SUV ரக வாகனத்துடன் மோதி சிறுவன் படுகாயம்

திங்கட்கிழமை மாலை பிராம்ப்டனில் இ-ஸ்கூட்டர் (e-scooter) மற்றும் SUV ரக வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்துள்ளான். திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்தை அடுத்து, இ-ஸ்கூட்டரில் சென்ற சிறுவன் அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். வில்லியம்ஸ் பார்க்வே (Williams Parkway) மற்றும் ஜேம்ஸ் பாட்டர் வீதிக்கு (James Potter Road) அருகில் உள்ள டென்கோர் வீதிக்கு (Dencor Street) அருகிலுள்ள கிளைட் வீதியில் (Clyde Road) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. […]
தமிழக மீனவர்கள் விவகாரம் – ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்கள் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து மீனவர் குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் கவலையை சுட்டிக்காட்டி முதலமைச்சர் இந்தக் […]
முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

ள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு முள்ளியவளை சந்தி அம்மன் பகுதியில் இன்று (12) முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. ஈழம் கவி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு நடத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்து கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட இனப்படுகொலையை நினைவுகூரும் வாரம் இன்று முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு வருகிறது. முள்ளிவாய்க்காலில் கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த […]
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை அனுஷ்டிக்கும் வகையில் வவுனியாவில் இலுப்பையடிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்களுக்கு இன்று (12) காலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியிருந்தனர். இறுதிப் போரின்போது உணவின்றி தவித்த மக்களுக்கு கஞ்சி எவ்வாறு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதையும், அக்காலப் பகுதியில் மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் நினைவுபடுத்தும் விதமாக இந்த கஞ்சி பரிமாறும் நிகழ்வு அமைந்திருந்தது. இந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு […]
“உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்வதா?” – சி.வி.சண்முகம் தரப்புக்கு அதிமுக தலைமை கடும் கண்டனம்!

சென்னை: அதிமுக-வில் ஏற்பட்டுள்ள பிளவு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை கழகம், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பினருக்கு எதிராகக் காரசாரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மந்திரி பதவிக்காகத் தவெக-விடம் மண்டியிட்டுக் கிடப்பதாக அவர்கள் மீது அதிமுக தலைமை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. அந்த அறிக்கையில், “சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது. திமுக-வுடன் கூட்டணி என்று பரப்பப்படும் வதந்திகள் திட்டமிட்ட சதி. […]