தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு நேற்று புதன்கிழமை (29.07.2026) கொக்குவில் பொற்பதி அறிவாலய மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கில் ‘அரசியல் தீர்வு – எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும், தமிழ்த் தேசியப் பேரவையினதும் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றியிருந்தார்.

‘கறுப்பு ஜீலை – கற்க மறந்த பாடங்கள்’ என்ற தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தனும், ‘செம்மணிப் புதைகுழிகள் – உயிர்த்தெழும் சாட்சியங்கள்’ என்ற தலைப்பில் அரசியற் செயற்பாட்டாளர் சுஜீவன் தர்மரட்ணமும் உரையாற்றியிருந்தனர்.
கா.சோ. சிவநேசனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந்நிகழ்ச்சியில் ச. சனோஜி, கோ. கம்சாயினி, சு. சுருதிகா , ஜீ. சஜீவன் ஆகியோரது செம்மணி தொடர்பான கவிதை வாசிப்பும் இடம் பெற்றது. தொடர்ந்து கறுப்பு ஜீலையில் பலியானவர்களினதும், செம்மணிப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களினதும் நினைவாக மெழுகுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது
