திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாக உரிமை யாழ்ப்பாண மாநகரசபைக்கே உரியது என்றும், அதன் ஆளுகையில் வெளிப்புற தலையீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் வலியுறுத்தி யாழ்ப்பாண மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாநகரசபையின் மாதாந்த அமர்வு இன்று மாநகர முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் நடைபெற்றது. இதன்போது முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா முன்வைத்த பிரேரணையின் அடிப்படையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அவர் உரையாற்றுகையில், யாழ்ப்பாண மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள “திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்” தொடர்பில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (Trust Fund) குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார்.
மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள கலாசார நிலையத்தின் முழுமையான நிர்வாக உரிமை மாநகரசபையிடமே இருக்க வேண்டும் என்றும், மத்திய அரசின் கலாசார அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு அதன் நிர்வாகத்தில் மேலாதிக்கம் செலுத்த முயற்சிப்பது உள்ளூராட்சி தன்னாட்சிக்கும் அதிகாரப் பரவலாக்கக் கொள்கைக்கும் முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், “கூட்டு நிர்வாகம்” என்ற பெயரில் மத்திய அரசு இந்நிலையத்தின் நிர்வாகத்தில் தலையீடு செய்வதாகவும், நிர்வாகக் குழுவில் மத்திய அரசின் பிரதிநிதிகள் அதிகளவில் உள்ளதால் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மாநகரசபையிடம் இருக்காது என்ற அச்சம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்நிலையம் எதிர்காலத்தில் சுயநிறைவு பெற்று வருமானம் ஈட்டும் நிலையை அடைந்ததும் அதன் முழுமையான நிர்வாகம் மாநகரசபைக்கு ஒப்படைக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன் மூலம் பெறப்படும் வருமானம் உள்ளூர் மக்களின் கலாசார மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சொத்து எமது மாநகரத்தினுடையது; அதிகாரமும் எம்மிடமே இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இப்பிரேரணைக்கு சபை உறுப்பினர்கள் அனைவரும் முழுமையான ஆதரவை வெளியிட்டதுடன், தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், மாநகரசபையின் உரிமைகளை பாதுகாக்க தேவையான எந்த நடவடிக்கைக்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்
GLCLUUKLLBG4RBSPCBCWA6SIAE

வெளிநாடு செல்லும் கனேடியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை: விமானப் போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கல்

May 14, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்த கோடை காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் கனேடியர்கள் பல்வேறு

carney15

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க பிரதமர் மார்க் கார்னி புதிய திட்டம்

May 14, 2026

கனடாவின் மின்சாரக் கட்டமைப்பை 2050-ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கும், எரிசக்திச் செலவுகளைக் குறைப்பதற்குமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுத்தமான மின்சார

699761571_27060087823620865_4783139409169234330_n

சுழிபுரம் பறாளாய் வயலில் மின்னல் தாக்கி மாணவன் பலி

May 14, 2026

இன்று மதியம் கடும் மழையுடன் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் சுழிபுரம் பறாளாய் வயலில் தனது தந்தையுடன் வேலை செய்துகொண்டிருந்த மாணவன்

698751647_2345591482594510_1734056233109631550_n

யாழ் மத்திய பேருந்து நிலைய மலசலகூட விவகாரம் சட்ட ஆலோசனைக்குச் செல்லும் நிலையில்!

May 14, 2026

யாழ் நகர மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடத் தொகுதியின் நிர்வாக உரிமை தொடர்பாக இலங்கை போக்குவரத்து

698751647_2345591482594510_1734056233109631550_n

திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகரசபைக்கே உரியது மாநகரசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

May 14, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் நிர்வாக உரிமை யாழ்ப்பாண மாநகரசபைக்கே உரியது என்றும், அதன் ஆளுகையில் வெளிப்புற தலையீடுகள்

698751647_2345591482594510_1734056233109631550_n

உணவுகளின் விலைகள் ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் – யாழ் மாநகர உறுப்பினர் றீகன் வலியுறுத்தல்

May 14, 2026

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலைகள், தரம் மற்றும் அளவுகள் தொடர்பாக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு

Mu

யாழ். மாநகர சபையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி

May 14, 2026

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு, இன்று வியாழக்கிழமை (14) யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர

Era

ஐயங்கேணியில் கைக்குண்டு மீட்பு

May 14, 2026

ஏறாவூர், ஐயங்கேணி பகுதியில் நீர் தேங்கி நிற்கும் இடமொன்றில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டதாக

cyber

இலங்கையில் காணாமல் போன 6.6 மில்லியன் டொலர் ஓமானில்?

May 14, 2026

ஆசிய நாடு ஒன்றில் இணையவழிக் குற்றவாளிகளால் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 6.6 மில்லியன் டொலர் ரொக்கப் பணத்தை ஓமான் பொலிஸார் மீட்டுள்ளதாக

default (15)

கனடா கிரிக்கெட் வாரியத்தின் நிதியை முடக்கியது ஐசிசி: 6 மாத காலக்கெடு விதிப்பு

May 14, 2026

கனடா கிரிக்கெட் வாரியத்தில் நிலவும் ஊழல், நிதி முறைகேடு மற்றும் ஆட்ட நிர்ணயச் சதி (Match-fixing) புகார்கள் குறித்து ‘The

ravikaran11

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

May 14, 2026

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை

rain

இலங்கையில் சீரற்ற வானிலையினால் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

May 14, 2026

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த