தனியார் வங்கி நிதி மோசடி : 2,619 தடவைகள் நடந்த கொடுக்கல் வாங்கல் வழக்கு

தனியார் வங்கியொன்றின் பொது பேரேட்டுக் கணக்கிலிருந்து (General Ledger) 13 பில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, தரவுகளை உள்ளீடு செய்த அதிகாரிகள் உள்ளிட்ட ஐவரிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (30) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த மோசடி தொடர்பாக விளக்கமறியலில் உள்ள லஹிரு ஹர்ஷண, பதும் சங்கல்ப, சாரங்க சேனாதீர உள்ளிட்ட நால்வர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கையில், முதலாவது சந்தேகநபர் 2022 இல் வங்கியின் கடன் பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் குறைபாட்டைப் பயன்படுத்தி இந்த மோசடியை ஆரம்பித்துள்ளார். மோசடி செய்த பணத்தை ‘பைனான்ஸ்’ கணக்குகள் ஊடாக கிரிப்டோகரன்சியாக மாற்றி, மீண்டும் உள்நாட்டுப் பணமாகப் பெறத் திட்டமிட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது சகோதரரான இரண்டாவது சந்தேகநபருடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். மற்றுமொரு நபரின் பெயரில் உள்ள பைனான்ஸ் கணக்கொன்றில் மாத்திரம் 10 பில்லியன் ரூபா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் 14 பேர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் 4 அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, இச்சம்பவத்தில் 2,619 தடவைகள் நிதிப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் 10 மில்லியன் முதல் 50 மில்லியன் ரூபா வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள், 2024 முதல் இவ்வளவு பெரிய மோசடி நடக்கும் வரை வங்கியின் கணக்காய்வுப் பிரிவு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பினர். மோசடி குறித்து வங்கியின் கணக்காய்வு அறிக்கைகளில் ஏதேனும் தகவல்கள் வெளிப்பட்டிருந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இரு தரப்பு விடயங்களையும் பரிசீலித்த நீதிவான், தரவுகளை உள்ளீடு செய்த ஐந்து அதிகாரிகளிடம் உடனடியாக வாக்குமூலம் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், 2024 ஆம் ஆண்டிலிருந்து வங்கியின் அனைத்து கணக்காய்வு அறிக்கைகளையும் பரிசோதித்து, உயர்மட்ட அதிகாரிகளுக்கு இது தெரிந்திருந்ததா ? என விசாரணை செய்யுமாறும், ஒவ்வொரு மாதமும் பணம் எவ்வாறு வங்கியிலிருந்து வெளியேறியது என்பது குறித்த முழுமையான அறிக்கையை அடுத்த வழக்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறும் வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

an

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்

June 25, 2026

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் காலநிலை மாற்றம் மற்றும் சக்திவள பாதுகாப்பின்மை ஆகிய இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய

ni

நைஜீரியாவில் நள்ளிரவில் பொதுமக்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு ; 20 பேர் பலி

June 25, 2026

நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20

up

மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை விரைவில் நிறைவு செய்ய பணிப்பு

June 25, 2026

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள்

Accident

நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் விபத்து ; 5 பேர் காயம்

June 25, 2026

அனுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, தில்லையடி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற முச்சக்கர வண்டி

madu matha

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்

June 25, 2026

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி. சோசை

3E7VMYH3WZF3XLNWLHPJSZRLEE

ஒரிலியாவில் கடத்தல் மற்றும் கொலை முயற்சி: பிரஹார ரொறன்ரோவைச் சேர்ந்த 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடங்குகிறது!

June 25, 2026

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரிலியா நகரில் உள்ள கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் (Gas station) ஒன்றிற்குள் மிசிசாகாவைச்

Chandra

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை – அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

June 25, 2026

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம்

air canada1555

விமானிக்கு திடீர் மருத்துவ அவசரநிலை: போஸ்டன் நகருக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்ட ‘எயார் கனடா’ விமானம்

June 25, 2026

நியூ ஜெர்சியில் இருந்து ஹாலிஃபாக்ஸ் (Halifax) நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயார் கனடா விமானத்தின் விமானிக்கு (Pilot) திடீரென ஏற்பட்ட

ba

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

June 25, 2026

மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக, நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பாரியதொரு கவனயீர்ப்பு

730211338_1737492697446614_7852674110750856440_n

, ஸ்டோனி கிரீக் தீ வைப்புச் சம்பவம்: சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ஹாமில்டன் போலீஸ்அவசரக் கோரிக்கை

June 25, 2026

ஹாமில்டன் (Hamilton): கனடாவின் ஒன்ராறியோ மாநிலம், கீழ் ஸ்டோனி கிரீக் (Stoney Creek) பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில்

arr

ஐஸ் போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது

June 25, 2026

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வியாபாரி ஒருவர் நேற்று புதன்கிழமை (24)

Harini-amarasooriya

நாட்டின் கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காணுமாறு பணிப்பு

June 25, 2026

கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய