தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், சீரமைப்புச் செய்க – ரவிகரன் எம்.பி

தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையத்தின்கீழான பெரியஇத்திமடு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச்செய்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயப் தொடர்பில் தம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

வரவுபிலவு குளத்தின்கீழ் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளின் அழைப்பையேற்று 20.04.2026நேற்று குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு சீரமைக்கப்படாதுள்ள வரபு பிலவுக்குளத்தினைப் பார்வையிட்டிருந்தார். இதன்போது குறித்த குளத்தினை விடுவிப்புசெய்வதுடன், சீரமைத்துத்தருமாறு விவசாயிகளால் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையிலேயே 21.04 2026இன்று நாடாளுமன்ற உறுப்பினரால் குறித்த விடயம் முல்லைத்தீவு மாவட்டசெயலாளரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறிப்பாக வரபுபிலவுக் குளத்தின் குளக்கட்டு உடைப்பெடுத்த நிலையில் நீண்டகாலமாக சீரமைக்கப்படாது கைவிடப்பட்டநிலையில் காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த குளத்தின் கீழுள்ள 78ஏக்கர் வயல் நிலங்களுக்குமுரிய 16பயனாளிகள் பெரும்போக மானாவாரி நெற்செய்கையினையே தற்போது மேற்கொண்டுவருகின்றனர்.
இவ்வாறான சூழலில் குறித்த குளத்தை சீரமைப்புச் செய்து தமது பயன்பாட்டிற்கு கையளிக்குமாறு தொடர்ச்சியாக உரியதரப்பினரிடம் தாம் கோரிக்கை விடுத்துவந்தபோதும், அக்குளத்தினைச் சீரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டிருந்தனர்.
இத்தகையசூழலில் தனிநபர் ஒருவர் குறித்த வரபுபிலவுக் குளத்தின் 20ஏக்கர்வரையிலான நீரேந்துபகுதியைச் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புச்செய்து கடந்த மூன்று வருடங்களாக நெற்செய்கையில் ஈடுபட்டுவருவதாகவும் விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எனவே தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள் வரபுபிலவுக் குளத்தினை விடுவிப்புச் செய்வதுடன், சிறுபோக நெற்செய்கையினையும் மேற்கொள்வதற்கு ஏற்றவாறு குறித்த குளத்தை சீரமைப்புச் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையைக் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பிரச்சினைதொடர்பில் தம்மிடம் எழுத்துமூலமாக கோரிக்கை கைடிதமொன்றினைக் கையளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அத்தோடு விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
அந்தவகையில் 21.04.2026இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், தனிநபர் ஆக்கிரமித்துள்ள குறித்த வரபுபிலவு குளத்தினை விடுவிப்புச் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதுடன், குறித்த குளத்தினைச் சீரமைப்புச் செய்து விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் குறித்து விடயங்கள் தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

default (3)

2 நாட்களாக மருத்துவமனையில் காத்திருந்து உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்: இது ஒரு ‘கொலை’ எனத் தீர்ப்பளிக்கக் கோரும் குடும்பத்தினர்

April 21, 2026

கனடாவின் ஒண்டாரியோவில் உள்ள மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சைக்காகக் காத்திருந்து, இறுதியில் முறையான கவனிப்பின்றி உயிரிழந்த பூர்வீகக்குடியை சேர்ந்த பெண்ணான

hungary pm

நெதன்யாகு ஹங்கேரிக்கு வந்தால் கைது செய்வோம்: புதிய பிரதமர் பீட்டர் மக்யார் அதிரடி

April 21, 2026

ர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து ஹங்கேரி விலகும் முடிவை தாம் நிறுத்தப்போவதாக ஹங்கேரியின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள பீட்டர்

Screenshot

இலங்கைக்கருகே ஈரானுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலில் அமெரிக்கப் படைகள் அதிரடி சோதனை: பென்டகன் அறிவிப்பு

April 21, 2026

ஆசியக் கடற்பரப்பில் ஈரானிய எண்ணெய் கப்பல் (Oil Tanker) ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிச் சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத்

tn-chief-electoral-officer-archana-patnaik-has-said-sir-forms-have-been-6-16-crore-people-in-tamil-nadu

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: உடனடியாக அமலுக்கு வந்த கெடுபிடிகள்! மீறினால் 2 ஆண்டு சிறை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு

hwar

வடக்கு மாகாண ஆளுநருடன் யாழ். கட்டளை தளபதி சந்திப்பு

April 21, 2026

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர்

Diana

முன்னாள் அமைச்சர் டயனா கமகேயிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

April 21, 2026

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தவறான தகவல்களை வழங்கியமை மற்றும் செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை

heat

சிவப்பு எச்சரிக்கை!

April 21, 2026

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவு ‘கவனம்

ddsfd

கடும் மழை காரணமாக சுமார் 50 தோட்ட வீடுகள் நீரில் மூழ்கின!

April 21, 2026

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று (21) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக, டிக்கோயா போடைஸ் தோட்டத்தின் தாழ்நிலப்பகுதிகளில்

war

இந்திய போர்க்கப்பல் கொழும்பு வந்தது

April 21, 2026

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், ‘கலப்பு வாயு முக்குளிப்புப் பயிற்சி’ (Mixed Gas Diving Training) திட்டத்தை

17405459651

“பிள்ளை அப்பாவுக்கு 5 கோடி கொடுக்கக்கூடாதா?” – மகன் விஜய் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்!

April 21, 2026

சென்னை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு

semm

எதிர்வரும் 27 ஆம் திகதி; செம்மணி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்!

April 21, 2026

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. செம்மணி மனித புதைகுழியில்

G2geVPza4AEUez7_

“வென்று வா தலைவா.. எப்போதும் உங்களுடன் இருப்பேன்!” – விஜய்க்காக சிபி சத்யராஜ் எழுதிய உருக்கமான கடிதம்!

April 21, 2026

சென்னை, தமிழக அரசியலில் நடிகர் விஜய் எடுத்துள்ள புதிய பாய்ச்சல் குறித்து விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், நடிகர் சத்யராஜின் மகன்