சர்வதேச தொழிலாளர் தினம்

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று(01) கொண்டாடப்படுகிறது.

1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் கூடிய தொழிலாளர்கள் வேலைநேரத்தில் 8 மணித்தியாலமாக வரையறுக்குமாறு கோரி முழக்கமிட்டனர்.

பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது.

1886 ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி போராட்டத்தின் தீர்மானமிக்க தருணம்.

முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து மே மாதம் 4ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் அணி திரண்டனர்.

பொலிஸார் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில், நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்தார்.

இந்த போராட்டம் மோதலாக உருவெடுத்ததுடன் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதை அடுத்து அது மேலும் உக்கிரமடைந்தது.

இந்த மோதலில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்றும் உறுதியாக கூற முடியாது.

போராட்டத்தை முன்னின்று நடத்திய தொழிலாளர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களுக்கு தூக்குத்தண்டனை, சிறைத்தண்டனை, ஆயுள் தண்டனை என தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்த தமது சகாக்களை எப்போதும் நினைவுகூரவேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைச்சு 1889ஆம் ஆண்டு தீர்மானித்தது.

அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

தொழிலாளர் உலகில் முதலாளித் திட்டம் ஏற்பட்டது முதல் 8மணி நேரம் மாத்திரமல்ல, அவர்கள் உழைத்து வந்தது 10மணி நேரம், 12 மணி நேரம், 16 மணி நேரம் ஊண் உறக்கமின்றி உழைத்து வந்திருக்கின்றார்கள். சுரங்கங்களிலும், குன்றின் மேற்களிலும், புயல் காற்றிலும், பெரும் வெள்ளத்திலும் உழைத்து வருகின்றார்கள் . தொழிலாளர்களில் முதியோர் மாத்திரமல்ல, சிறு குழந்தைகளும் தூங்க வேண்டிய இரவிலும் உழைத்து வருகின்றனர்.

உலகில் உயிர் முளைத்த கால முதல், கஷ்டமும் தியாகமும் அவ்வுயிர்களுடன் கலந்தேயிருக்கின்றன.

இது பிரபஞ்ச வாழ்க்கையிலொன்றாகும். கஷ்டமில்லாமல் தியாகமில்லாமல் ஒன்றும் கை கூடுவதாகவில்லை. உலகத்தின் மேல் நடப்பது, பெரும்பான்மை மக்களுக்கு முள் கம்பளத்தின் மேல் நடப்பதைப் போல் ஒத்திருக்கின்றது.

முள் கம்பளத்தின் மேல் நடக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆனால் அக்கம்பளத்தின் மேல் நடந்தால்தான், சுகப் பேற்றையடைய முடிகின்றது. இதைத்தான் தொழிலாளர் இயக்கத்துக்கு ஆசானாகிய காரல் மார்க்ஸ்  சமதர்மத்தின்  முரண் என்பார். கஷ்டமில்லாமல் சுகமில்லை. சுகமும் கஷ்டமில்லாமல் கிடைப்பதில்லை. இதுதான் சமதர்மத் தத்துவத்தின் முரண்பாடு. பொது உடைமைக்காரர் யாராகிலும், இந்தப் பிரபஞ்ச முரண்பாட்டை அலட்சியம் செய்ய முடியாது. சோஷலிஸ்ட் அனைவரும் இந்த பிரபஞ்ச முரண்பாட்டை அடிப்படையாக வைத்து தங்கள் தத்துவத்தைக் கட்ட வேண்டும். சுதந்திரம் வேண்டுமானாலும், ஸகோதர தத்துவம் வேண்டுமானாலும், சரிசம தத்துவம் வேண்டுமானாலும் தியாகத்தால் தான் அடைய முடியும்.

இந்த மே தின ஞாபகம் ஏகாதிபத்திய ஆட்சிக்கல்ல, செல்வத்திற்கும் சம்பளத்திற்குமல்ல, கொடுங்கோன்மைக்குமல்ல, உலக மக்களனைவரும் உண்டு உடுக்கவும், இருந்து வாழவும், சந்ததி விருத்தி செய்யவும், அந்த சந்ததியார் உலக சுகப் பேற்றை பெறவும் செய்யும் தியாகமாகும்.

தற்போது உலகம் பலவித இடுக்கண்களால் கஷ்டப்பட்டு வருகின்றது. இல்லாமையும் வறுமையும், பஞ்சமும், வெள்ளமும் உலகை ஒருபுறம் வருத்தி வர கொடுங்கோன்மைக் கட்சிகளாலும், முதலாளிகளின் அட்டூழியத்தாலும், வறுமையாலும் உலக நெருக்கடி அதிகரிக்கும் போலும்! உலகம் பிற்போக்கால் ரொம்பவும் கஷ்டப்பட வேண்டிவரும் போலும் உலக நெருக்கடி குறைந்த பாடில்லை. சேனைத் தளங்கள் உலகில் அதிகரித்து வருகின்றன. மகாயுத்தத்தின் முன்னிருந்த சேனைத்தளங்களைவிட எண்மடங்கு அதிகரித்திருக்கின்றன.

உலக சமாதானத்தை நிலைக்க வைக்க வலிமை தொழிலாளர்களாவர். இவர்கள்தான் அகில உலகப் போரை நிறுத்த வல்லவர். இவர்களுக்கு வேண்டியதொன்றே. அதாவது, அகில உலகத் தோழர்கள் ஒற்றுமைப்பட்டு சுகத்திலும், துக்கத்திலும் ஒன்றுபட்டு வாழ வேண்டியதொன்றே. இந்த ஒற்றுமைக்காக உலகத் தொழிலாளர் பல்லாண்டுதோறும் பட்ட கஷ்ட நிஷ்டூரங்களை யெல்லாம் ஞாபகப்படுத்தும் தினம் மே மாதம் முதல் திகதியாகும்.

Sarana

முன்னாள் அமைச்சர் சிறைச்சாலை அலுவலகங்களை சுத்தம் செய்கிறார்!

June 24, 2026

வெலிக்கடை சிறைச்சாலையின் அலுவலங்களை சுத்தம் செய்யும் பணியில் முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைச்சாலை வட்டாரத் தகவல்களை

Yoshitha

யோஷித ராஜபக்சவின் கல்வித் தகைமைகளில் முறைகேடு?

June 24, 2026

இலங்கை கடற்படையின் 45 ஆவது கடற்படை மாணவர் (Cadet) குழுவின் ஆட்சேர்ப்பிற்கான அடிப்படைத் தகைமைகளில் ஒன்றான க.பொ.த சாதாரண தரப்

WQO3J26HAREGNCDYTLLSB666GI-300x169-1

கனடாவில் கடமையின் போது காவல்துறை அதிகாரிகள் அதிகளவில் கொல்லப்படுகிறார்கள்?

June 24, 2026

கடந்த இரண்டு வாரங்களுக்குள் கனடாவில் கடமையின் போது அதிகாரி ஒருவர் கொல்லப்படுவது இது மூன்றாவது முறையாகும். திங்கட்கிழமையன்று, மொன்றியலின் (Montreal)

chemmani-3

செம்மணி: அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆவணம்! அரசு நடுநிலை நீதித்தன்மையை வெளிப்படுத்தவேண்டும் – இளையதம்பி சிறீநாத்

June 23, 2026

யாழ். செம்மணியில் தொடர்ச்சியாக மீட்கப்படும் எலும்புக்கூடுகள் தமிழ் மக்களுக்கு எதிராக காலம் காலமாக நேர்ந்த அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆவணமாகியுள்ளது.

Image-03

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட 10 ஹெலிகொப்டர்கள் இலங்கை விமானப்படையிடம் அதிகாரப்பூர்வமாகக் கையளிப்பு

June 23, 2026

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பத்து ‘TH-57 சீ ரேஞ்சர்’ (Bell 206) ரக ஹெலிகொப்டர்களை அமெரிக்க அரசாங்கம் இன்று (23) இலங்கை

barrie poli

லேம்ப்மேன் பூங்காவில் தந்தை மீது பதின்ம வயதினர் தாக்குதல்: இரு சிறுவர்கள் கைது

June 23, 2026

ஒன்டாரியோவின் பெர்ரி (Barrie, Ont.) நகரில் உள்ள லெட்டிஷியா ஹைட்ஸ் (Letitia Heights) பகுதியில் திங்கட்கிழமை மாலை நடந்த வன்முறைச்

2TPTZ6NJGJHEFCOEYMKIQ5DK3I

ஹாலிஃபாக்ஸில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

June 23, 2026

ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், படுகாயமடைந்த நபர் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

10

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்! செப்டம்பர் 15-ல் கோலாகலத் தொடக்கம்!

June 23, 2026

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு, ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்

9

குட்டிக்கதை சொல்கிறேன் என்ற முதலமைச்சரின் உளறல்! – உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பதிவு!

June 23, 2026

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நிறைவு நாளான இன்று, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது பதிலுரையில் திமுக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

8

நடுவர் மன்றம் கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து! – சீமான் குற்றச்சாட்டு

June 23, 2026

சென்னை: காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, புதிய நடுவர் மன்றம்

gaze

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்!

June 23, 2026

இலங்கை அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக புதிய ஆணைக்குழுவொன்றினை நியமித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்

728491361_1636915590703808_8789904857320064912_n

பகல்நேர காப்பகத்திற்குள் (Daycare) வாகனம் மோதி குழந்தை பலியான விவகாரம்: முதியவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

June 23, 2026

கடந்த ஆண்டு ரிச்மண்ட் ஹில் (Richmond Hill) பகுதியில் உள்ள பகல்நேர சிறுவர் காப்பகத்திற்குள் எஸ்யூவி (SUV) ரக வாகனம்