ஏறாவூர், ஐயங்கேணி பகுதியில் நீர் தேங்கி நிற்கும் இடமொன்றில் பழுதடைந்த நிலையில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
மீட்கப்பட்ட கைக்குண்டைச் செயலிழக்கச் செய்வதற்காக வவுணதீவு விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவைப் பெற்று, குறித்த கைக்குண்டை பாதுகாப்பான முறையில் வெடிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.