எலோன் மஸ்க்கின் Grok குறித்த குற்றச்சாட்டுக்கள்; விசாரணை ஆரம்பம்

ஈலோன் மஸ்க்கின் ‘xAI’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘Grok’ எனும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள், சிறுவர்களின் ஆபாசப் படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் தகவல் ஆணையாளர் அலுவலகம் (ICO) முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

‘X’ (முன்னாள் ட்விட்டர்) தளத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்பம், தனிநபர்களின் அனுமதியின்றி அவர்களின் அந்தரங்கப் படங்களை திரிபுபடுத்தி ஆபாசமாக மாற்ற அனுமதிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக பிரித்தானியாவின் தகவல் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “Grok AI மூலம் சிறுவர்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.

இது பிரித்தானிய தரவு பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதோடு, பொதுமக்களுக்கு, குறிப்பாக சிறுவர்களுக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாரிஸில் உள்ள ‘X’ அலுவலகங்களில் பிரெஞ்சு சட்டத்தரணிகள் அதிரடி சோதனை நடத்திய அதே நாளில் இந்த விசாரணை அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மறுபுறம், பிரித்தானிய ஊடக ஒழுங்குபடுத்தல ஆணைக்குழுவான ‘ஒஃப்கொம்’ (Ofcom), ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ‘X’ நிறுவனம் தனது கடமைகளைச் சரியாகச் செய்கிறதா என்று ஏற்கனவே விசாரித்து வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் Grok AIன் செயல்பாடுகள் குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளன.

இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சில குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் ஆபாசப் படங்களை உருவாக்கும் வசதிகளைக் கட்டுப்படுத்தியுள்ளதாக ‘xAI’ நிறுவனம் தெரிவித்துள்ளது.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை