இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சுமார் 20 லட்சம் இலங்கையர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்டுதோறும் சுமார் 40,000 பேருக்கு புதிய புண்கள் ஏற்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சைத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ரெஸ்னி காசிம், இந்த நீரிழிவு புண்கள் பலரால் உணரப்படுவதைவிட மிகவும் ஆபத்தானவை என்றும், சில சமயங்களில் புற்றுநோயை விடவும் கடுமையானவை என்றும் எச்சரித்தார்.

தற்போது சுமார் 100,000 நீரிழிவு நோயாளிகள் இலங்கையில் புண்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பலருக்குக் கால் அகற்றல் தேவைப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உயர் சர்க்கரை அளவு காரணமாக ஏற்படும் நரம்பு பாதிப்பு, இரத்த ஓட்டம் குறைவது மற்றும் கல்சியம் படிதல் ஆகியவையே சிறிய புண்கள் கூட சிக்கலாவதற்கான முக்கிய காரணங்கள் எனக் குறிப்பிட்ட அவர், கால் அகற்றப்பட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மூன்றில் இரண்டு பங்கினர் இறக்க நேரிடும் என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

நுரையீரல் புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஆகியவற்றைத் தவிர, மற்ற அனைத்துப் புற்றுநோய்களைக் காட்டிலும் நீரிழிவு காரணமாகக் கால் இழந்தவர்களின் விகிதமே மிக மோசமாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, ஊனம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் சிக்கல்களைத் தவிர்க்க, நீரிழிவு நோயாளிகள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதும், ஆரம்பகால நோயறிதலும், சரியான பாதப் பராமரிப்பும் மிக அவசியம் என்று இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

vali

சர்வதேச மனித உரிமைகள் தினம்; வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்

December 10, 2025

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா

uthaya

நிதிக் கணிப்பீட்டில் யாழ். மாவட்டத்தில் ஊழல் – உதய கம்மன்பில

December 10, 2025

‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய

Education

பாடசாலைகளுக்கான கல்விச் செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சினால் விசேட சுற்று நிரூபம்

December 10, 2025

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்தல் மற்றும் தவணைப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி

rai.

புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பது அறிவிப்பு

December 10, 2025

இயற்கை அனர்த்தங்களினால் புகையிரத திணைக்கள சொத்துகளுக்கு 300 மில்லியன் டொலர் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்துக்கான

Varunaga

பாதிக்கப்பட்ட மக்களுக்கான தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்

December 10, 2025

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு

va

ஜனாதிபதியை சந்திக்க வட மாகாண கடற்றொழிலாளர்கள் முயற்சி!

December 10, 2025

கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்தும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்ததுமான மனு

cum

மீண்டும் வருகிறார் கம்மின்ஸ்

December 10, 2025

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற

mats

‘மத்ஸ்யா 6000’; முதல் மனித ஆழ்கடல் பயணம்

December 10, 2025

முதல் மனித ஆழ்கடல் பயணம் மத்ஸ்யா 6000 திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என இந்திய மத்திய அமைச்சர் ஜிதேந்திர

par

மொய்ஸே கீன் பார்சிலோனா செல்கிறார்?

December 10, 2025

இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம்

new

நியூயார்க் டைம்ஸ்; பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான்

December 10, 2025

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார்.

mes

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள மெஸ்ஸி!

December 10, 2025

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது.

Para

பாரா சைக்கிளிங் கோப்பையில் இந்தியாவுக்கு 11 பதக்கம்

December 10, 2025

பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார். தாய்லாந்தில் பாரா சைக்கிளிங்