அரசாங்கம் மக்களின் சுமையை மேலும் அதிகரித்திருக்கிறது – யுக்திய கூட்டமைப்பு

அரசாங்கம் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம், ஏற்கனவே மக்கள் முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்பட்டிருப்பது குறித்து யுக்தி கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் உழைக்கும் மக்களின் இயக்கங்களையும் ஜனநாயகத்தையும் நீதியையும் வென்றெடுப்பதற்கு மக்களால் நடாத்தப்படும் போராட்டங்களையும் ஆதரிக்கும் மக்கள் மன்றமான யுக்திய கூட்டமைப்பினால் நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை சட்டமூலம் கடந்த 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்தவின் கூற்றுப்படி, போதிய அளவில் ஒழுங்குபடுத்தப்படாத நுண்நிதி மற்றும் பணமாகக் கடன் வழங்கும் துறையை உரிமம் வழங்கி கண்காணிக்கும் ஒரு அதிகாரசபையை நிறுவுவதும், அதன்மூலம் கடன் பெறுபவர்களை சுரண்டலிலிருந்து பாதுகாப்பதுடன் நிதியியல் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதுமே இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆனால் ‘உயர் வட்டி வீதங்களுடன்கூடிய சுரண்டல் தன்மை கொண்ட நுண்நிதிக்கடன்களால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்’ என தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது மக்கள் ஏற்கனவே முகங்கொடுத்திருக்கும் தாங்கமுடியாத சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் செயற்படுவது குறித்து மிகுந்த கவலையடைகிறோம்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் இயற்றப்பட்டிருக்கும் புதிய சட்டம், தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிரான சட்டங்களை இயற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் தொடர்ச்சியான பாரம்பரியமாகும். இது நுண்நிதிக்கடன் வலையின் அடிப்படைக் காரணங்களைத் தவிர்த்து செல்கிறது. அத்தோடு பெண் கடன்பெறுனர்களுக்கான கடன் நீதியைப் புறக்கணிக்கிறது.

இச்சட்டம் குடும்பக்கடன் மற்றும் பொதுக்கடன் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளைப் புரிந்துகொள்ளத் தவறுகிறது. அதுமாத்திரமன்றி புதிய அதிகாரசபையில் பெண்களின் சமனான பிரதிநிதித்துவத்தைக் கட்டாயமாக்குவதிலும் இச்சட்டம் தோல்வியடைந்துள்ளது. கடன்பெறும் பெண்களின் பிரதிநிதிகளும், அவர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இந்த ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பில் உள்வாங்கப்படவில்லை என்றால், அவர்களது வாழ்வியல் அனுபவங்களை அதன் உறுப்பினர்கள் எவ்வாறு அறிந்துகொள்வர்? வாழ்வை முன்கொண்டுசெல்வதில் பெண்கள் வழங்கும் ஊதியமில்லா மற்றும் ஊதியத்துடன்கூடிய பங்களிப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எவ்வாறு தீர்மானங்களை மேற்கொள்வர்?

கடன் வழங்கல் செயன்முறையில் துன்புறுத்துபவர்களையும், குழப்பக்காரர்களையும் ஒழுங்குபடுத்தவேண்டிய சட்ட மீளுருவாக்கமானது, அதனைவிடுத்து சமூக மட்டத்தில் இயங்கிவரும் கடன்வழங்கல் கட்டமைப்புக்களான மரண ஆதார சங்கம், விவசாய அங்கங்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களின் கூட்டமைப்புக்கள் என்பவற்றை அழிப்பதற்கு வழிகோலுகிறது. நலிவுற்ற தொழிலாளர் வர்க்கப் பெண்களுக்கு ஒரு உதவுகரமாகவும், தீங்கு விளைவிக்கும் கடன் வசூலித்தல் நடைமுறைகளிலிருந்து பாதுகாப்பு அரணாகவும் இயங்கிய அவ்வமைப்புக்களை இந்தச் சட்டம் சிதைக்கிறது என அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

seeman

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!-சீமான்

April 30, 2026

தமிழர்களின் இன ஓர்மையை சிதைக்கும் இலங்கை இனவாத அரசின் சதியை இருநாட்டு தமிழ் மீனவர்களும் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்என நாம்

thyity1

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்!

April 30, 2026

அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பத் தயாரில்லை”: தையிட்டி காணி விவகாரத்தில் உரிமையாளர்கள் காட்டம்! யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள

iran

இலங்கை கிரிக்கெட் மாற்றக் குழுவின் தலைவராக எரான் விக்ரமரத்ன நியமனம்: புதிய யாப்பு மற்றும் மறுசீரமைப்பு குறித்து அறிவிப்பு

April 30, 2026

இலங்கை கிரிக்கெட் (SLC) மாற்றக் குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எரான் விக்ரமரத்ன, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும்

maalai-malar_2026-04-29_qx0ocmbn_sreesaisilks0

சமூக வலைதளப் பிரபலம் நாகலட்சுமி கொ*லையில் அதிர வைக்கும் தகவல்கள்: கணவரின் ஈகோ விபரீதமான பின்னணி!

April 30, 2026

சென்னை: நங்கநல்லூரில் ‘Ready to Wear’ சேலை பிசினஸ் மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பிரபலமாக இருந்த தொழில் அதிபர்

collage-down-1777513973

வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க 234 வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: தேர்தல் ஆணையம் அதிரடி!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், 234 தொகுதிகளுக்கும் தலா

dailythanthi_2026-04-30_lol3o75a_kozadi33

கீழடி 11-ம் கட்ட அகழாய்வு: வரிசையாகக் கண்டெடுக்கப்படும் சாயக் கிண்ணங்கள் – வியப்பில் தொல்லியல் ஆய்வாளர்கள்!

April 30, 2026

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ம் கட்ட அகழாய்வில், அடுத்தடுத்து சாயக் கிண்ணங்கள் மற்றும் பழங்காலச் செங்கல்

ka_sengottaiyan

“கருத்துக்கணிப்பு வேறு, மக்கள் தீர்ப்பு வேறு” – 200 இடங்களில் தவெக வெல்லும் என செங்கோட்டையன் உறுதி!

April 30, 2026

சென்னை: “தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்பது குறிப்பிட்ட நபர்களின் தனிப்பட்ட கருத்து; மக்கள் தீர்ப்பு என்பது முற்றிலும் வேறானது” என்று

collage-down-1748402151

சித்ரா பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்காக 100 இலவசப் பேருந்துகள் இயக்கம்!

April 30, 2026

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வரும் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வசதிக்காக, தற்காலிக பேருந்து நிலையங்களில்

684512279_1543096277856332_8658114898696776537_n copy

தேர்தல் முடிவுகள் நெருங்கும் வேளையில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் இன்று அவசர ஆலோசனை!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்

thirumavalavan-vck-2025-06-678bbbedc1311a5ad231b1963628d359

விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து!

April 30, 2026

சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு எதிராகத்

Ravi

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் சைபர் திருட்டு: ஆஸ்திரேலியா எச்சரித்த பின்னரே விழித்துக்கொண்ட இலங்கை

April 30, 2026

இலங்கை செலுத்த வேண்டிய கடன் தவணை செலுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் சுட்டிக்காட்டிய பின்னரே, 2.5 மில்லியன்

harsha

கோப் (COPF) குழு கூட்டத்தில் பங்கேற்க திறைசேரி செயலாளர் மறுப்பு: மக்கள் ஆணையை அவமதிக்கும் செயல் – ஹர்ஷ

April 30, 2026

திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும கூட்டத்தில் கலந்துகொள்ள மறுப்புத் தெரிவிப்பது ஒரு தன்னிச்சையான செயலாகும். மேலும், இந்த நாட்டு மக்கள்