சென்னை:
தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய அதிமுக-வில் உட்கட்சிப் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அடுத்தடுத்து ஐந்து தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்ததைக் காரணங்காட்டி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக-வின் 47 எம்.எல்.ஏ-க்களில் 17 பேர் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகச் சட்டமன்றச் செயலாளரிடம் மனு அளித்துள்ளனர். தளவாய் சுந்தரம், ஓ.எஸ். மணியன் உள்ளிட்டோர் அளித்துள்ள அந்த மனுவில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியே தொடர்வார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், மீதமுள்ள 30 எம்.எல்.ஏ-க்கள் எஸ்.பி. வேலுமணியைச் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்வு செய்யத் திட்டமிட்டுத் தனியாகச் செயல்படுவது அதிமுக-வில் பிளவு ஏற்படுவதை உறுதி செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி திமுக-விற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாகவும், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயகுமார், “அதிமுக-வின் தலைமை எடப்பாடிதான்; கட்சியை உடைக்கும் முயற்சி ஏதும் நடக்கவில்லை” என விளக்கமளித்துள்ளார். இருப்பினும், பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு ஆதரவாக மனு அளிக்காதது, அதிமுக-வின் எதிர்காலத்தை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
#ADMK_Crisis #EPSvsSPV #TNAssenbly #VijayAsCM #TVK #BreakingNews #May11 #TamilNaduPolitics #FortStGeorge #ADMKSplit #PoliticalDrama #ThalapathyVijay #NewGovernmentTN #OppositionParty #InternalConflict #StalinVsVijay #ElectionResults2026 #TamilNews #VijayMakkalIyakkam #TN_Politics_Update_“`