ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் புதிய பயிற்சியாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC), தேசிய பந்துவீச்சு பயிற்சியாளராக ரையன் வான் நீகெர்க் (Ryan van Niekerk) என்பவரையும், தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக ஜோர்டான் கிரிகோரி (Jordan Gregory) என்பவரையும் நியமித்துள்ளது.

ரையன் வான் நீகெர்க் இதற்கு முன்னர், 2023 முதல் 2026 வரையான காலப்பகுதியில் நெதர்லாந்து தேசிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், இடைக்கால தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். தனது புதிய பொறுப்பில், தேசிய ஆண்கள் அணி உட்பட அனைத்து தேசிய அணிகளினதும் வேகப்பந்துவீச்சு நடவடிக்கைகளை இவர் கண்காணிப்பார்.

இடைக்கால தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பதற்கு முன்னர், நெதர்லாந்து ஆண்கள் அணியின் உதவி பயிற்சியாளராகவும் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது பதவிக்காலத்தில், 2023 ஐசிசி ஆண்கள் உலகக்கிண்ணம், 2024 மற்றும் 2026 ஐசிசி ஆண்கள் இருபதுக்கு-20 உலகக்கிண்ண தொடர்கள் போன்ற முக்கிய சர்வதேச தொடர்களில் நெதர்லாந்து அணி பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜோர்டான் கிரிகோரி தேசிய களத்தடுப்பு மற்றும் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவராவார். முன்னர் நெதர்லாந்து கிரிக்கெட் சபையின் களத்தடுப்பு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 2023 ஐசிசி ஆண்கள் இருபதுக்கு-20 உலகக்கிண்ணம் உள்ளிட்ட பல இருதரப்பு மற்றும் சர்வதேச தொடர்களில் இவர் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.

தனது புதிய பொறுப்பின் கீழ், உயர்திறன் மையத்தில் உள்ள தேசிய ஆண்கள் அணி உள்ளிட்ட அனைத்து தேசிய அணிகளினதும் களத்தடுப்பு மற்றும் சுழற்பந்துவீச்சுப் பயிற்சிகளை இவர் மேற்பார்வையிடுவார்.

இந்த இரு நியமனங்களும் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு ஆண்டுகால பதவிக்காலத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

Air cana

எரிபொருள் விலை உயர்வு: நியூயோர்க்கிற்கான சில விமான சேவைகளை ரத்து செய்கிறது ஏயர் கனடா

April 18, 2026

அமெரிக்க-ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரித்துள்ளதால், டொராண்டோ மற்றும் மொன்றியலில் இருந்து நியூயோர்க்கின் ஜே.எஃப்.கே (JFK) விமான

rohan silv

பிரதி பாதுகாப்பு அமைச்சரை நீக்குமாறு கோரிக்கை

April 18, 2026

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதிப்படுத்துவதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவை அந்தப் பதவியில்

pima

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி: 9 பில்லியன் ரூபா கொடுப்பனவை நிறுத்தி வைத்தது அரசாங்கம்

April 18, 2026

தரம் குறைந்த நிலக்கரி விநியோகம் தொடர்பான கவலைகள் காரணமாக, நிலக்கரி விநியோகஸ்தர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய 9 பில்லியன் ரூபாவிற்கும்

photo-collage.png (11)

கனடா – பிரம்டனில் வாகனவிபத்து!

April 18, 2026

கனடா – பிரம்டனில் வெள்ளிக்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பிரம்டன் மேபீல்ட் அன்ட் ஷிங்கூசி

b

ஹெரோயின் கடத்தல்: மீன்பிடிப் படகின் உரிமையாளரும் கைது

April 18, 2026

சுமார் 150 கிலோகிராமுக்கும் அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்தி வந்த விவகாரத்தில், ‘தெனுவன் புதா’ என்ற பலநாள் மீன்பிடிப்

jail

வர்த்தக நிலையமொன்றினுள் பெண்ணின் தலைமுடியை வெட்டி சித்திரவதை: ஐவர் கைது

April 18, 2026

ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்

thelli

தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவித்தார்களா என முதலில் சோதியுங்கள்; பொண்ணொருவர் பகிரங்கக் குற்றச்சாட்டு

April 18, 2026

தனது மகனை தெல்லிப்பழை பொலிஸார் அவமானப்படுத்தியதாக தாயாரொருவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு, தெல்லிப்பழை பொலிஸார் போதைப்பொருள் பாவிப்பது இல்லை என்றால்

cru oil

கச்சா எண்ணெய் விலை பாரியளவில் சரிவு!

April 18, 2026

சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெயின்

karan

குற்றவாளி ‘கரன்தெனிய ராஜு’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

April 18, 2026

இந்தியாவில் வைத்து அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கரன்தெனிய ராஜு’ என்பவர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்

arres

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகள் மீது தாக்குதல் மேற்கொண்டவர் கைது

April 18, 2026

யாழ்ப்பாணம்- வடமராட்சி, கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நான்கு வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

easter

இராணுவ புலனாய்வுப் பிரிவும் ஈஸ்டர் குண்டு தாக்குதல் திட்டத்தில் கூட்டுச் சதி?

April 18, 2026

ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்தப்படவிருந்த காலப்பகுதியில் சஹ்ரான் இந்தியாவுக்கு சென்று விட்டதாக இராணுவ புலனாய்வு பிரிவு அறிவித்ததாக பொலிஸ் மா

nalin

எரிபொருள் விலை அதிகரிப்பு; அமைச்சர் வெளியிட்ட தகவல்

April 18, 2026

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் நிலவும் பெற்றோலியப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கங்களுக்கு அமைய எதிர்காலத்தில்