கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது வயதில் காலமானார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தாய்லாந்து அரச மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நாய்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவரது இதயத்தில் ஏற்பட்ட ‘மைகோபிளாஸ்மா’ தொற்றினால் கடும் இதயத் துடிப்பு சீர்குலைவு ஏற்பட்டதே இதற்குக் காரணம் என வைத்தியர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

சுமார் மூன்றரை ஆண்டுகள் பாங்கொக்கில் உள்ள சுலாலோங்கோர்ன் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், வியாழக்கிழமை அந்நாட்டு நேரப்படி இரவு 07:48 மணிக்கு காலமானதாக இன்று (12) வெள்ளிக்கிழமை காலை வெளியிடப்பட்ட அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரச குடும்பத்திலேயே மிகவும் படித்த, திறமையான ஒருவராக இளவரசி பஜ்ரகிதியாபா மதிக்கப்பட்டார்.

சட்டத்துறையில் பயிற்சி பெற்ற அவர், அமெரிக்காவின் புகழ்பெற்ற கோர்னெல் பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுகலை பட்டங்களைப் பெற்றவர்.

நியூயோர்க்கில் உள்ள ஐநாவுக்கான தாய்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய அவர், பின்னர் தாய்லாந்தின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

2012 முதல் 2014 வரை ஆஸ்திரியாவுக்கான தாய்லாந்து தூதுவராகப் பணியாற்றினார். அத்துடன், தென்கிழக்கு ஆசியாவிற்கான ஐநா போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகத்தின் (UNODC) சட்டத்தின் ஆட்சிக்கான நல்லெண்ண தூதுவராகவும் செயல்பட்டார்.

தாய்லாந்து சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகள் மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்களுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு, அவரது தந்தை மன்னர் வஜிராலோங்கோர்ன், இளவரசிக்கு ‘ஜெனரல்’ அந்தஸ்து வழங்கி, தனது தனிப்பட்ட பாதுகாப்புப் படையின் பணியாளர் தலைவராகவும் நியமித்திருந்தார்.

இளவரசி பஜ்ரகிதியாபாவின் மறைவு, தாய்லாந்து அரச வாரிசுரிமையில் பெரும் கேள்விக்குறியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய மன்னர் வஜிராலோங்கோர்னுக்கு 73 வயதாகியும் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடுத்த வாரிசை அவர் அறிவிக்கவில்லை.

தாய்லாந்து பாரம்பரியப்படி ஆண் வாரிசுகளுக்கே முன்னுரிமை என்றாலும், 1974ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தத்தின்படி பெண் வாரிசுகளும் அரியணை ஏற முடியும்.

மன்னருக்கு 5 மகன்கள் இருந்தாலும், அவரது இரண்டாவது மனைவியின் 4 மகன்கள் 1996 இல் அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டு அமெரிக்காவில் வாழ்கின்றனர். மூன்றாவது மனைவியின் மகனான இளவரசர் தீபாங்கோர்ன் அடுத்த வாரிசாகக் கருதப்பட்டாலும், மன்னராகச் செயல்படுவதற்கான அவரது ஆளுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இதனால், பல தாய்லாந்து மக்கள் இளவரசி பஜ்ரகிதியாபாவே அடுத்த மகாராணியாகவோ அல்லது இளவரசருக்கு உதவியாக நாட்டை வழிநடத்தும் பொறுப்பையோ ஏற்பார் என நம்பியிருந்தனர். அவரது திடீர் மறைவு வாரிசுரிமை விவாதங்களை முடக்கியுள்ளது. அத்துடன், தாய்லாந்தின் கடுமையான ‘அரச நிந்தனைச் சட்டம்’ காரணமாக இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த

fue

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து

6

“சாத்தான்குளம் இரட்டைக் கொலை குற்றவாளிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி கிடையாது!” – மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் போலீசாரின் மனுவை அசுர வேகத்தில் தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்!

June 13, 2026

மதுரை: “உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில்

5

“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார்!” – பட்ஜெட் மாஸாக இருக்கும் எனத் தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அறிவிப்பு!

June 13, 2026

தூத்துக்குடி: “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்; தவெக அரசின்