2023 ஆம் ஆண்டிலிருந்து தேடப்பட்டு வந்த கனடிய குற்றவாளி (fugitive) ஒருவர், கொலம்பியாவின் மெடலின் (Medellín) நகரில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக விதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 12 ஆண்டு கால சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த போது, சட்டவிரோதமாக தப்பியோடியதாகக் கூறப்படும் 39 வயதுடைய அரிஃப் ஜுமான் (Arif Jhuman) என்ற நபர், கனடா தழுவிய பிடியாணை (Canada-wide warrant) பிறப்பிக்கப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேலான நிலையின் பின்னர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் (Ontario Provincial Police) தெரிவித்துள்ளனர்.
புளோரிடாவிலிருந்து கனடாவிற்கு 100-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச துப்பாக்கிக் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் அமெரிக்க வழக்கறிஞர்களும் ஜுமான் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். அவற்றில் 29 துப்பாக்கிகள் பின்னர் கொலைக் குற்றப் புலனாய்வு உட்பட கனடிய குற்றச் சம்பவங்கள் நடந்த இடங்களில் இருந்து மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஜுமான் “கில்லானி” (Gillani) என்ற போலிப் பெயரைப் பயன்படுத்தி வந்ததுடன், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என நம்புவதாக கொலம்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொலம்பிய பொலிஸார், இன்டர்போல் (Interpol) மற்றும் சர்வதேச சட்ட அமலாக்க கூட்டாளிகள் ஆகியோர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கை மூலம் இந்த கைது பொதுமக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.