திண்டிவனம்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக மிகப்பெரிய டிராமா செய்து கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அசுர வேகத்தில் மாஸாகக் குற்றம் சாட்டியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அதிமுக தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், ஒருங்கிணைப்பாளராகவும், தற்பொழுது பொதுச்செயலாளராகவும் பதவியேற்றார். ஆனால், அவரது தலைமையில் அதிமுக தொடர்ந்து தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. தேர்தலுக்குத் தேர்தல் கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்துகொண்டே போகிறது. மக்களுடைய நன்மதிப்பை அதிமுக முழுமையாக இழந்துவிட்டது என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எம்ஜிஆரால் நீதிகேட்டுத் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று ஒரு சர்வாதிகாரப் போக்கில் சென்று கொண்டிருக்கிறது. யாருடைய ஆலோசனையையும் ஈபிஎஸ் கேட்பதில்லை; தன் குடும்பத்தார் மற்றும் பணம் கொடுப்பவர்களின் கருத்தை மட்டுமே கேட்டுச் செயல்படுகிறார். இந்தச் செயல்பாடுகளால் அதிமுக ஒரு குடும்பத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டுவருவதற்குத் தான் இந்த டிராமாவை அரங்கேற்றுகிறார். கட்சிக்காக உழைத்தவர்கள், பணம் செலவு செய்தவர்கள் வேதனையுடன் வெளியேறுகின்றனர். அவர்களைத் துரோகிகள் எனச் சொல்வது நியாயமா? திமுகவில் இருந்து எம்ஜிஆர் விலகியதால் அவர் துரோகியாகிவிட்டாரா? அதிமுகவின் தோல்விக்கான காரணத்தைத் தொண்டர்கள் உணர்ந்துவிட்டனர்; ஆனால் ஈபிஎஸ் உணரவில்லை. தோல்வி குறித்து விவாதிக்க அதிமுக பொதுக்குழு அல்லது செயற்குழுவையாவது அவர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று சி.வி.சண்முகம் ஆவேசமாகக் கூறினார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பசுபதி அதிரடியாகப் பேட்டியளித்துள்ளார். சி.வி.சண்முகம் தவெக-வின் கைக்கூலியாகச் செயல்படுகிறார் என்றும், தவெக-வின் தூண்டுதலின் பெயரிலேயே ஈபிஎஸ்-ஐ விமர்சிக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். அதிமுகவினர் தவெக-வுக்குச் செல்வதற்குக் காரணமே சி.வி.சண்முகம் தான். தனது அண்ணனை வைத்து குடும்ப அரசியல் செய்த அவர், சொந்தக் கட்சியினரையே தோற்கடித்தவர். தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு சி.வி.சண்முகம் போன்றவர்களே முக்கியக் காரணம். தற்பொழுது ஆளுங்கட்சியான தவெக-வில் அவரை மதிக்கவில்லை என்பதால், மீண்டும் அதிமுக-விற்கு வந்து அதே பொறுப்பைக் கேட்கிறார். அதிமுகவில் இருந்துகொண்டே கட்சியைக் குழிதோண்டிப் புதைக்கிறார் என்று பசுபதி மாஸாக வெளுத்து வாங்கியுள்ளார். இந்த இரு தரப்பு மோதல் தமிழக அரசியல் களத்தில் மாபெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
#CVShanmugam #EdappadiPalaniswami #EPS #AIADMK #TNPolitics #Villupuram #Tindivanam #TVK #Vijay #ThalapathyVijay #TamilNadu #ADMK #EpsSonPolitics #FamilyPolitics #Pasupathy #AiadmkGeneralCouncil #CvShanmugamSpeech #TNAssemblyElection2026 #TamilNews #BMNews #PoliticalUpdate #TvkGovernment #AiadmkIssue #SofaModelGovernment #Politics2026 #TamilNaduPolitics #BreakingNewsTN