செங்கல்பட்டு:
தவெக-வில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா செங்கல்பட்டில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக மற்றும் அதிமுக கட்சிகளை ஒரே நேரத்தில் அசுர வேகத்தில் வெளுத்து வாங்கினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்தப் பேரியக்கத்திற்குப் பெரும் துரோகம் செய்துவிட்டார். அதிமுக என்னும் கப்பல் மூழ்கிவிடாமல் இருக்கவே முதலமைச்சர் விஜய் அதைக் காக்கப் பாடுபடுகிறார். தமிழக அரசியலில் ஜாதி, மத அரசியலை வேரோடு பிடுங்கி எறிந்த பெருமை விஜய்யையே சாரும். கடந்த 30 ஆண்டுகளில் திமுக செய்யத் தவறிய அத்தனை மாற்றங்களையும், வெறும் 30 நாட்களில் முதலமைச்சர் விஜய் செய்துகாட்டியுள்ளார் என்று அவர் புகழாரம் சூட்டினார்.
மேலும், தற்போது அதிமுக-வும் திமுக-வும் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு செயல்படுகின்றன என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகள் தவெக-விற்கும் விசிக-விற்கும் இடையே மோதல் இருப்பதாக ஒரு தவறான பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. விசிக தலைவர் திருமாவளவன் என்னிடம் பேசும்போது, விசிக-வால் தவெக-விற்கு எந்த ஆபத்தும் வராது என்றும், தவெக-விற்குத் தங்களுடைய ஆதரவு முழுமையாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். இந்த ஆட்சிக்கு ஆபத்து வரும் என்று யாரும் நினைக்க வேண்டாம். அமைச்சரவையில் யாரைச் சேர்த்தாலும் அது ஆட்சி அதிகாரத்தின் பாதுகாப்பிற்காக அல்ல; மாறாகச் சிறந்த நிர்வாகத்திற்காகவே. நாளை தேர்தல் வந்தாலும் தனியாகக் களமிறங்கி வெற்றி பெற முதலமைச்சர் விஜய் தயாராக உள்ளார் என்று அவர் மாஸாகத் தெரிவித்தார். ஆதவ் அர்ஜுனாவின் இந்த அதிரடிப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
#AadavArjuna #TvkGovernment #Vijay #ThalapathyVijay #DMK #AIADMK #Thirumavalavan #VCK #TNPolitics #Chengalpattu #TamilNadu #SofaModelGovernment #Politics2026 #BreakingNewsTN #TvkMass #TNElection2026 #TamilNews #BMNews #PoliticalUpdate #TvkCadres #AadavArjunaSpeech #VijayMass #AntiDmk #AntiAiadmk #PoliticalRebellion #TamilNaduNews