பயங்கரவாத தடைச்சட்டம் மனித குலத்துக்கு எதிரானது ; விசாரணைகள் என்ற பெயரில் கொலை செய்ய கூடாது – விஜயதாஸ ராஜபக்ஷ

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது.

“பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் ”

என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது என முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் ஞாயிற்றுக்கிழமை(14) இடம்பெற்ற நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். உண்மையை வெளிப்படுத்த வேண்டும். நீதியான விசாரணைகளுக்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 7 நாட்கள் முடிவடைந்த பிறகும் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. நாட்டில் ஏதேனும் சிறு அசம்பாவிதம் இடம்பெற்றால் அது குறித்து 24 மணித்தியாலத்துக்குள் நீதவான் நீதிமன்றத்துக்கு ‘பி’ அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.

7 நாட்கள் கடந்தும் அறிக்கை சமர்ப்பிக்காத காரணத்தால் நான் முறைப்பாடளிக்குமாறு குறித்த பொலிஸ் நிலையங்களுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தினேன். குண்டுத்தாக்குதல் இடம்பெற்று 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக விஜயதாஸ ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் அதனால் முறைப்பாடளிக்கிறோம் என கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு தற்போதைய விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் எமது அரசாங்கத்தில் விசாரணைகளை சிறந்த முறையில் மேற்கொண்டு 80 குற்றவாளிகளை அடையாளப்படுத்தி 41 வழக்குகளை தாக்கல் செய்தோம்.

இவ்வாறான பின்னணியில் தான் அப்போதைய சட்டமா அதிபர் சேவையில் இருந்து ஓய்வுப்பெறுவதற்கு ஒருநாளைக்கு முன்னர் உறக்கத்தில் இருந்து எழுந்ததைப் போன்று ‘ குண்டுத்தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி உள்ளார்’ என்று குறிப்பிட்டார்.இதன் பின்னர் பேராயர் கர்தினால் பிரதான சூத்திரதாரி யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போதைய சட்டமா அதிபர் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் அதற்கு அப்போதைய சட்டமா அதிபர் இணக்கம் தெரிவிக்கவில்லை. வாக்குமூலம் பெறுவதை தடுப்பதற்காக நீதிமன்றத்தை நாடி உத்தரவு பெற்றுக்கொண்டார்.

இந்த விடயம் குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் வினவிய போது ‘சட்டமா அதிபர் தனது சேவை காலத்தை மேலும் ஒருவருடத்துக்கு நீட்டிக்குமாறு குறிப்பிட்டார்.அதற்கு நான் இணக்கம் தெரிவிக்கவில்லை. அதன் பின்னரே இவ்வாறு குறிப்பிடுகிறார்’ என்று என்னிடம் குறிப்பிட்டார்.

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பிடிப்பதாகவும், உண்மையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்குள் பிரதான சூத்திரதாரியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆனால் இன்றுவரை உண்மை வெளிப்படுத்தப்படவில்லை.

சுரேஸ் சலே தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் விசாரணை என்ற பெயரில் கொலை செய்ய கூடாது.பயங்கரவாத தடைச்சட்டம் மிகவும் மோசமானது. மனித குலத்துக்கு எதிரானது.

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டமூலத்தை நாங்கள் சமர்ப்பித்தோம்.ஆனால் மக்கள் விடுதலை முன்னணியின் மூன்று உறுப்பினர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தை நாடினார்கள்.

யுத்தம் இல்லாத நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு, அந்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை முன்னிலைப்படுத்திச் செயற்படுகிறது.

75 ஆண்டுகாலத்தை சாபம் என்று விமர்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த ஒன்றரை வருட கால ஆட்சியில் என்ன செய்தார்கள்.கடந்த கால ஆட்சியாளர்கள் நாட்டுக்கு ஏதாவதொன்றை செய்துள்ளார்கள். கடந்த காலங்களை விமர்சித்துக் கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என்ன செய்வார் என்று நாங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

doug-ford-ontario-premiere-february-7-2023

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்

August 24, 2026

அவர் எனது பின்புறத்தில் முத்தமிடட்டும்’: ட்ரம்பின் புதிய வரி அச்சுறுத்தலுக்கு ஃபோர்ட் கடும் கண்டனம்எதிர்வரும் புத்தாண்டு முதல் கனடாவின் அனைத்து

trump carney

வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை 50% ஆக உயர்த்த ட்ரம்ப் திட்டம்

August 24, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடாவுக்கு எதிராகப் பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்வரும் புத்தாண்டு முதல் “அனைத்து வகையான பெரிய

au

அவுஸ்திரேலியாவில் பாலூட்டி விலங்கில் முதன்முறையாக எச்5என்1 பறவைக் காய்ச்சல் தொற்று உறுதி

August 24, 2026

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக பாலூட்டி விலங்கொன்றில் எச்5என்1 (H5N1) பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு அவுஸ்திரேலியாவின் பீச்போர்ட்

fif

பிஃபா தலைவரை சிறுவர் கால்பந்து தொடரில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கோரிக்கை

August 24, 2026

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை இந்த வார இறுதியில் டொமினிகன் குடியரசில் நடைபெறவுள்ள சிறுவர் கால்பந்து தொடரில்

jud

வவுனியாவில் மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு கடூழிய சிறைத்தண்டனை

August 24, 2026

2013 ஆம் ஆண்டு வவுனியாவில் தனது 14 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கடூழிய

26-6a8afc6b4e102

மஞ்சள் காவிக்கு சிறப்பு சலுகை?

August 24, 2026

அனுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர், மேல் நீதிமன்ற வளாகத்திற்குள் நீதிபதி நுழையும் நுழைவாயிலின் ஊடாக எவ்வாறு நீதிமன்ற

NAMAL

மக்கள் பிரச்சினைகளை விடுத்து அநுர தரப்பு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளில் தலையிடுகின்றது!

August 24, 2026

தற்போதைய அநுர அரசாங்கம் மக்கள் பிரச்சினைகளை விடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வழக்குகளை துரிதப்படுத்தவும், அவர்களை சிறைக்கு அனுப்புவதற்குமே விசேட கவனம்

dailythanthi_2026-08-24_vrhb80pa_protest

“பணி நிரந்தரம் கோரி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மறியல்; 250 பேர் கைது!”

August 24, 2026

சென்னை சென்னை பாரிமுனையில் பணி நிரந்தரம் செய்யக் கோரித் தற்காலிகத் தூய்மைப் பணியாளர்கள் நடத்திய திடீர் சாலை மறியலும், அதனைத்

dailythanthi_2026-08-23_qs9w3fhj_13 (1)

“புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வரத் தயங்கும்!” – பரந்தூர் விமான நிலையத் திட்ட ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக த.வெ.க அரசு அறிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்குத்

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது