பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா தொடர்ந்து உதவும் – தூதுவர் மார்டின் இசபெல்லா

கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின் இசபெல்லா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பயனியர் வீதியில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் தலைமை அலுவலகத்தில், கலை மற்றும் சமாதானத்தை வலியுறுத்தும் வகையிலான மாபெரும் மாயச்சித்திரக் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கோலாகலமாக ஆரம்பமானது.

இக்கண்காட்சியினை கனேடிய உயர் ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா (Martin Isabella) அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் வளாகத்தில் 3 தினங்கள் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன்,மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜி.பிரணவன்,கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக சிரேஸ்ட விரிவுரையாளர் பிரியதர்சன்,மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இக்கண்காட்சியானது சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்துவதோடு, கலை மூலமாக சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்களும் மாணவர்களும் ஆர்வத்துடன் வருகை தந்து மாயச்சித்திரக் கலை நுணுக்கங்களை வியப்புடன் கண்டு மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கண்காட்சியை பார்வையிட்ட அதிதிகள் அதனை வரைவதற்கான பிரதான செயற்பாட்டாளராகயிருந்தவரையும் கௌரவித்ததுடன் சமாதான பூங்காவின் செயற்பாடுகளையும் கேட்டறிந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கனடிய தூதுவர்,

இந்த மைல்கல்லை நாம் கொண்டாடும் வேளையில், இந்த அற்புதமான நிறுவனத்திற்கு தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் கருணையால் உயிர் கொடுத்த கனடாவின் பால் ஹோகனின் நினைவையும் அவர் விட்டுச்சென்ற மரபையும் கௌரவிக்க நாம் சிறிது நேரம் ஒதுக்குவது பொருத்தமானது. படைப்பாற்றல், இயற்கை மற்றும் சமூகம் ஆகியவற்றின் குணப்படுத்தும் ஆற்றலை பால் ஹோகன் ஆழமாக நம்பினார்.

ஆழ்ந்த மோதல்கள் மற்றும் மனக்காயங்கள் நிறைந்த ஒரு காலத்தில், வெளியிலிருந்து தீர்வுகளைத் திணிப்பதற்குப் பதிலாக, குழந்தைகளுக்குச் செவிசாய்க்கவும், பெண்களுக்குச் செவிசாய்க்கவும், உள்ளூர் மரபுகளுக்குச் செவிசாய்த்து அவற்றை மதிக்கவும் அவர் தேர்ந்தெடுத்தார். அந்த அர்ப்பணிப்பிலிருந்தே பட்டர்ஃபிளை பீஸ் கார்டன் , பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் குணப்படுத்துதலுக்கான ஒரு இடமாக உருவானது.

இந்த நிறுவனம் தனது 30-வது ஆண்டு மைல்கல்லைக் குறித்து புதியதொரு தசாப்தத்திற்குள் நுழையும் வேளையில், உங்களின் பணி முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட நிச்சயமற்ற தன்மைகளை உலகம் எதிர்கொண்டு வரும் சூழலில், பட்டர்ஃபிளை பீஸ் கார்டன் போன்ற இடங்கள், அமைதி என்பது நிறுவனங்களால் மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன. அது குணப்படுத்துதல், கற்பனைத் திறன் மற்றும் மனித பிணைப்புகள் மூலமாகவுமே கட்டமைக்கப்படுகிறது.

இந்த பூங்காவானது பழங்குடி மக்களின் கலைகள், சடங்குகள் மற்றும் இயற்கை சார்ந்த இடங்கள் மூலம் மனக்காயங்களை ஆற்ற ஆதரவளிக்கிறது. அதேவேளையில் கலாச்சார அடையாளம் மற்றும் கண்ணியத்தையும் பாதுகாக்கிறது.

தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் ஒரே படைப்பாற்றல் மற்றும் பராமரிப்பு தளத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், சமூக மட்டத்தில் நம்பிக்கை, மன உறுதி மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க இது உதவியுள்ளது. இந்த இணைப்புகள், சமூகத்தால் வழிநடத்தப்படும் உளவியல் மற்றும் அமைதி காக்கும் பணிகளுக்கான ஒரு முன்மாதிரியாக இந்தப் பூங்காவிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளன.

இந்த பூங்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் உறவை நான் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறேன். இதில் கனடா அரசின் கடந்த கால ஆதரவுகளும், மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்துடனான தொடர்புகளும் அடங்கும். கனடா அரசின் சார்பில் எங்களது ஆதரவு நிச்சயமாகத் தொடரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டுவதுடன், நல்லிணக்கத்தையும் இணக்கத்தையும் வலுப்படுத்தும் என நம்புகிறேன். மக்களிடையேயான பிணைப்பே நீடித்த கூட்டாண்மைக்கு அடிப்படையாகும். இந்த அணுகுமுறைக்கு பங்களிப்பதில் கனடா பெருமிதம் கொள்கிறது.இதற்கான ஆதரவினை கனடா தொடர்ந்து வழங்கும் என்றார்.

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க