பாடசாலைகளில் மூளைக்காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான விசேட வழிகாட்டுதல்கள்

மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) பாடசாலைகள் மற்றும் சமுக அடிப்படையிலான பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருவதாகத் தென்படுவதால் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அனைத்து சுகாதாரத் துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடந்த வார இறுதியில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுத்தல் சம்பந்தமாக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

விசேட வழிகாட்டுதல்களின் படி நோயினை கண்டறிதல், வகைப்படுத்தல், மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பொது சுகாதார நடைமுறைகள், பாடசாலைக்கான நடைமுறைகள், மாதிரி சேகரிப்பு மற்றும் ஆய்வக சோதனைகள், மருத்துவ நடைமுறைகள், சமூக அளவிலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், திருவிழா மற்றும் சமூக வழிகாட்டுதல்கள் போன்றவை அடங்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கையாக சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை நன்கு கழுவுதல் , இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை முழங்கையால் அல்லது கைக்குட்டை/திசுவால் மூடுவது, அறிகுறிகள் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பது, வீடுகளில் சரியான காற்றோட்டத்தை உறுதி செய்வது போன்ற விடயங்களை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்நோய் பரவுவதை அவதானித்துள்ளதாகவும் தொற்றுநோயியல் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும், மேலும் மூளைக்காய்ச்சல் 7 நாட்களுக்குள் சரியாகிவிடும் என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்து உள்ளது.

நீர், உணவு மற்றும் நோயாளியின் இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் நீர்த்துளிகள் மூலமாகவும், நெருங்கிய தொடர்பு மூலமாகவும், வைரஸ் பரவுவதாகவும் அத்துடன் 3 முதல் 7 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படுவதாகவும் சுவாச மண்டலம் வழியாக நோய் பரவுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம தலைமையிலான தொற்றுநோயியல் நிபுணர்கள் குழு இந்த அறிவுறுத்தல்களை தயாரித்துள்ளது.

அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர்கள், அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் வைத்திய அத்தியட்சகர்கள், மாகாண மற்றும் மாவட்ட சமூக வைத்தியர்கள், தொற்றாநோய் வைத்திய அதிகாரிகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கும் தொற்றுநோயியல் திணைக்களத்தின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் கருணாபேம தெரிவித்துள்ளார்.

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த

fue

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026

எரிபொருளுக்காக அரசாங்கம் வழங்கி வரும் மானியங்கள் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள், அரசாங்க நிதி பற்றிய குழு

anu

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பி.க்கள் கடிதம்!

June 13, 2026

‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Pain

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

June 13, 2026

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த அரியமான் கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகு மூலம் இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக

death

புலோலியில் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

June 13, 2026

பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலோலி தெற்குப் பகுதியில் காணாமல் போயிருந்த சிறுவன் ஒருவனின் சடலம், வீட்டின் அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து

6

“சாத்தான்குளம் இரட்டைக் கொலை குற்றவாளிகளுக்குச் சிறையில் முதல் வகுப்பு வசதி கிடையாது!” – மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் போலீசாரின் மனுவை அசுர வேகத்தில் தள்ளுபடி செய்தது மதுரை நீதிமன்றம்!

June 13, 2026

மதுரை: “உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூரக் கொலை வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில்

5

“நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார்!” – பட்ஜெட் மாஸாக இருக்கும் எனத் தூத்துக்குடியில் நிதியமைச்சர் மரிய வில்சன் அசுர வேக அறிவிப்பு!

June 13, 2026

தூத்துக்குடி: “தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்; தவெக அரசின்