கனடாவில் சோகம்: மாயமான புதுப்பிறந்த குழந்தையின் உடல் எச்சங்கள் மீட்பு; இருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், மாயமாகியிருந்த புதுப்பிறந்த குழந்தையின் உடல் எச்சங்கள் (Remains) காப்புக்காட்டுப் பகுதியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக இருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாலிஃபாக்ஸ் பிராந்தியப் பொலிஸாரின் விபரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் ‘ஓல்ட் கோச் வீதிக்கு’ (Old Coach Road) அப்பால் உள்ள ஒரு அடர்ந்த காப்புக்காட்டுப் பகுதியில் (Wooded area) இருந்து இக் குழந்தையின் […]
பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக் கொண்டதில் அரசாங்கத்திற்கு பல இலட்சத்திற்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு உரித்தான இந்த கட்டடத்தின் 65 எண் கட்டடம் 1999 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு பெற்று கொள்ளப்பட்டுள்ளது. அன்று ஒரு மாதத்துக்கான கட்டணமாக 3000 ரூபாவே அறவிடப்பட்டுள்ளது. குறித்த கார்ல்டன் பாலர் பாடசாலை இலாப நோக்கமற்று […]
ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை நேற்று (24) ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். விசாரணைகளின் பின்னர் பின்னர் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 47 வயதுடைய சந்தேகநபர் ஹாலிஎல, தெமோதரை […]
மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த முடியாது என்று குறிப்பிடுவது ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 2018 மற்றும் 2019 […]