பாகிஸ்தானில் பாடசாலைகளுக்கு பூட்டு, வீட்டிலிருந்தே வேலை

ரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை சமாளிக்கும் நோக்கில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) நாடு தழுவிய ரீதியில் கடுமையான எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (09) அன்று பாகிஸ்தான் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அரசாங்கச் செலவினங்களைக் குறைத்து, முழுமையான எரிபொருள் முடக்கத்தை தவிர்ப்பதே இந்த அதிரடி மாற்றங்களின் பிரதான இலக்கு என அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்புகள்:

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் பாடங்கள் இணையவழி (Online) ஊடாக நடத்தப்படும்.

போக்குவரத்துக்கான எரிபொருள் தேவையை குறைக்கும் பொருட்டு, அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் (Work from Home) முறை உடனடியாக அமுல்படுத்தப்படுகிறது.
அரச துறைகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்கு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் (Ambulance) தவிர்ந்த ஏனைய உத்தியோகபூர்வ வாகனப் போக்குவரத்துகள் 60 சதவீதத்தால் குறைக்கப்படும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரான் போர் தீவிரமடைவதற்கு முன்னரே பாகிஸ்தானின் பொருளாதாரம் எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய போர்ச் சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Yogarasa

திருச்சி முகாமில் ஈழத்தமிழர்; உண்ணாவிரதப் போராட்டம்!

March 10, 2026

திருச்சி சிறப்பு முகாமில் கடந்த முதலாம் திகதியிலிருந்து இன்றுவரை தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ஈழத்தமிழரான யோகராசா நவநாதன்

Death-2

மூன்று பிள்ளைகளின் தந்தை தற்கொலை: இளவாலையில் சம்பவம்

March 10, 2026

யாழில், தவறான முடிவெடுத்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(9.3.2026) இடம்பெற்றுள்ளது. டச்சுவீதி, பெரியவிளான், இளவாலை பகுதியைச்

an

ஜனாதிபதியுடன் தேரர்கள் விசேட கலந்துரையாடல்

March 10, 2026

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தருமான இத்தேபானே

ve

கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மணல் விலை அதிகரிப்பு

March 10, 2026

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது என தெரிவித்த வடக்கு மாகாண

kur

மார்ச் 30; குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

March 10, 2026

குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகளை இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்க களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ding

உப்பாறு பகுதியில் 18 டிங்கி படகுகளுடன் இருவர் கைது

March 10, 2026

திருகோணமலை, உப்பாறு பகுதியில் மகாவலி கங்கையை அண்டி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் இரு சந்தேக

yo

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷிதவுக்கு அதி குற்றப்பத்திரிகை

March 10, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார் வங்கி கணக்கொன்றில், 17 மில்லியன் ரூபாய் பணம்

sara

யாழ்.சரவணையில் ஆலயச் சிலை உடைப்பு

March 10, 2026

யாழ்ப்பாணம், சரவணை பகுதியில் அமைந்துள்ள ஆலயமொன்றின் சிலையினைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்துத்

au

ஈரானிய வீராங்கனைகளுக்கு அவுஸி.பொலிஸார் உதவி

March 10, 2026

ஈரான் பெண்கள் கால்பந்தாட்ட வீராங்கனைகள் ஐவருக்கு அடைக்கலமளிக்கப்படுவதற்கு முன்பாக அவர்களை அணி ஹொட்டலிலிருந்து அவுஸ்திரேலிய பொலிஸார் மீட்டெடுத்ததாக அவுஸ்திரேலியாவின் உள்நாட்டு

g

கற்பிட்டியில் கடல் அட்டைகளுடன் ஏழு பேர் கைது

March 10, 2026

கற்பிட்டி, முகத்துவாரம் மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடல் பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக

chi

மட்டக்களப்புச் சிறுவன் உலக சாதனை

March 10, 2026

உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன்

ind

மோடி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்? – சுப்ரமணியன் சுவாமி

March 10, 2026

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘சமரசங்களுக்கு’ உள்ளானதாக, பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள