மட்டக்களப்புச் சிறுவன் உலக சாதனை

உலகில் மிக வேகமாக எழுதக்கூடிய குழந்தை என்ற கௌரவத்தைப் பெற்று, மட்டக்களப்பைச் சேர்ந்த நான்கு வயதுச் சிறுவன் அப்டியல் ரயன் விக்டர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வின் டொனால்ட் விக்டர் மற்றும் கிறிஸ்டின் ஷிரோமினி விக்டர் தம்பதியினரின் மகனான இவர், தனது மூன்று வயதிலேயே தாயின் வழிகாட்டலில் வாசிக்கும் மற்றும் எழுதும் ஆற்றலை பெற்றுள்ளார். ரயனின் அசுர வேக எழுத்தாற்றலை கவனித்த அவரது பெற்றோர், இதனை உலக சாதனையாக பதிவு செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து, மட்டக்களப்பு இருதயபுரத்தில் உள்ள திரு இருதயநாதர் மண்டபத்தில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மேற்பார்வையில் இதற்கான சாதனை முயற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கை கிளையின் துணைச் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் சிவ வரதகரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடுவர்களாக கலந்துகொண்டனர்.

இந்த முயற்சியின் போது, 3 மற்றும் 4 எழுத்துகளைக் கொண்ட 200 ஆங்கிலச் சொற்களை வெறும் 8 நிமிடங்களில் எழுதி அப்டியல் ரயன் விக்டர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனை உத்தியோகபூர்வமாக ஆய்வு செய்த நடுவர் குழு, புதிய உலக சாதனையாக அங்கீகரித்தது.

சாதனை படைத்த சிறுவனுக்குச் சான்றிதழ், நினைவு கேடயம், பதக்கம் மற்றும் அடையாளச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தாண்டவன்வெளி புனித காணிக்கை அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ரி.ஏ. யூலியன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்தந்தை மெருஷன் ஹென்ரிக் மற்றும் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பா. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்திச் சிறப்புரையாற்றினர்.

மேலும், கௌரவ விருந்தினர்களாக புதுவையூர் பு. தியாகதாஸ், ‘சின்னஞ்சிறு கல்விமான்கள்’ பாலர் பாடசாலை தலைமை ஆசிரியை ஜெ.எம். வலயட் மற்றும் ‘Jez Reel Kids Garden International College’ நிர்வாகப் பணிப்பாளர் பி.என். ஸ்டான்லி உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

2

அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்சி நிதி வாங்கியது யார்? – அமைச்சர் செங்கோட்டையன் சவால்!

June 25, 2026

சென்னை: அதிமுக ஆட்சிக்காலத்தில் பள்ளி உரிமம் புதுப்பித்தலுக்கு நிதி வசூலிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இதற்கான ஆதாரத்தை

1

மின்சார வாரியத்தின் மொத்த கடன் ரூ. 2.47 லட்சம் கோடி! – வெள்ளை அறிக்கை வெளியீடு!

June 25, 2026

சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்

namal

கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ் லங்கா’ (Krrish Lanka) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு,

protest11

சாவகச்சேரியில் நாளை முழு கடையடைப்புப் போராட்டம்!

June 25, 2026

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரின் (Gnanasundaram

Yoshitha-Rajapaksa (1)

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ஷ முன்னிலையானார்

June 25, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் காவற்துறையின் மத்திய குற்றவியல்

Ilangu

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோரின் பதவி பறிப்பு – இளங்குமரன் கண்டனம்

June 25, 2026

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம்

namal raja

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குறிவைத்து பேசுவது குறித்து அரசை நாமல் சாடல்

June 25, 2026

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை குறிவைத்து அரசு கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய பின்னர் அவர்களையே

ANURA PARL

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் நீக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர  அறிவிப்பு!

June 25, 2026

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் (2026) முழுமையாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

anura

ஊழல், போதைப்பொருள் மற்றும் அரசியல் பிணைப்பை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி உரை!

June 25, 2026

கொழும்பு ஊழல், திட்டமிட்ட பாதாள உலகக் குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் இரகசியப்

ANURA PARL

கைதானவர்கள் குறித்த மேலும் பல திடுக்கிடும் விபரங்கள் இன்று வெளியாகும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

June 25, 2026

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூன் 25) கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான மேலும் பல அதிர்ச்சியூட்டும்

PRISIONERS PRO

சிறைச்சாலைகளில் 184 மரணங்கள்: இலங்கைக்கு வந்துள்ள ஐநா குழுவிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அதிர்ச்சி அறிக்கை

June 25, 2026

இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் கைதிகளின் மரணங்கள், சிறைச்சாலைகளின் அதிகளவிலான நெருக்கடி நிலை, சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவல் கூடங்களின் மோசமான

ARMY OCCU LAND

வலிகாமம் வடக்கு: மக்களின் சொந்தக் காணியில் இராணுவப் பண்ணை பெயர்ப்பலகை! ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க முயற்சி என மக்கள் கவலை

June 25, 2026

வலிகாமம் வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) அமைந்துள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியாரின் விவசாயக் காணிகளில் இலங்கை இராணுவம்