திண்டுக்கல்
உலகப் புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை மோசடியாகப் பதிவு செய்த விவகாரத்தில், தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கொடைக்கானலில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்! இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழனி கோயில் அடிவாரம் பகுதியில் உள்ள சுமார் 1.40 ஏக்கர் நிலத்தை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த வழக்கில் 11 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த மெகா மோசடிக்குத் துணைபோன சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தற்போது சிபிசிஐடி காவலில் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, நீதிமன்ற நிபந்தனை முன்ஜாமீன் பெற்று விசாரணைக்கு ஆஜராகி வந்த ஜஸ்டின் மணிகண்டனின் நிரந்தர முன்ஜாமீன் மனுவை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர் எந்த நேரத்திலும் கைதாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் திடீரெனத் தலைமறைவானார்.
அவரைத் தீவிரமாகத் தேடி வந்த சிபிசிஐடி போலீசாருக்கு, கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சிக்குக் கீழ் பகுதியில் உள்ள ஒரு ரகசிய பங்களாவில் அவர் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு உடனடியாக விரைந்த சிபிசிஐடி போலீசார், ஜஸ்டின் மணிகண்டனை நாலாபுறமும் சுற்றிவளைத்து அதிரடியாகக் கைது செய்தனர்! மேலும், இந்த மெகா மோசடியில் தொடர்புடைய மற்றொரு முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயபிரகாஷையும் சிபிசிஐடி போலீசார் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
#PalaniTemple #LandScam #CBCID #JustinManikandanArrest #Dindigul #Kodaikanal #TamilNews #ViralNews #TNPolice #TamilNaduNews #TrendingTN #LatestNewsTN #PalaniMurugan #CrimeNewsTN