நாட்டில் நிலவும் பாரிய குற்றச் செயல்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்

குற்றவாளிகளை நாடுகடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் திங்கட்கிழமை (30) பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ASP சட்டத்தரணி எப். யூ. வூட்லர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,

நாட்டில் பாரிய குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் குற்றவாளிகளை, சர்வதேச பிடியாணை (Red Notice) இல்லாமலேயே இலங்கைக்கு கொண்டு வரும் விசேட நடவடிக்கைகள் பொலிஸ் மா அதிபரின் நேரடி கண்காணிப்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, இன்றைய தினம் ஓமான் நாட்டில் வைத்து தென் மாகாணத்தைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொலை, சட்டவிரோத ஆயுதக் கடத்தல் மற்றும் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் மீதான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

மேலும், கடந்த 28ஆம் திகதி இந்தியாவில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் 2026 ஜனவரி மாதம் 4 கிலோவிற்கும் அதிக கொக்கெய்ன் போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏப்ரல் 4ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, புனித வாரத்தை (Holy Week) முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்க பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

தேவாலயங்களில் வழிபாடுகள் நடைபெறும் போது சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கோ அல்லது பங்குத்தந்தைகளுக்கோ அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இக்காலப்பகுதியில் முப்படையினர் மற்றும் சிவில் உடையில் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நிலவும் பொருளாதார சவால்களைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான முறையில் எரிபொருளைப் பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்த 27 சந்தேக நபர்கள் கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 44,811 லீற்றர் டீசல், 2,668 லீற்றர் பெட்ரோல் மற்றும் 2,062 லீட்டர் மண்ணெண்ணெய் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஆம் ஆண்டிற்காக காவல்துறை திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப 7,000 புதிய அதிகாரிகள் மற்றும் 100 சட்டத்தரணிகளை உதவி காவல்துறை அத்தியட்சகர் (ASP) பதவிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2482 மற்றும் 2477) வெளியிடப்பட்டுள்ளதுடன், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 08 ஆம் திகதி மற்றும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் மேலதிக விபரங்களுக்கு 071-8591925, 011-2505202 மற்றும் 011-2552953 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

jail

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகம் செய்த மூவர் கைது

April 17, 2026

மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு

tv

த.வெ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

April 17, 2026

ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்பன

wat

நான்கு நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கிப் பலி!

April 17, 2026

கடந்த ஏப்ரல் 12 முதல் நேற்று (16) வரையிலான நான்கு நாட்களில் மட்டும், நீரில் மூழ்கி 20 பேர் துரதிர்ஷ்டவசமாக

jey

நிலக்கரி கொள்வனவு ஊழல் அழுத்தங்கள்; எரிசக்தி அமைச்சர் இராஜினாமா!

April 17, 2026

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தனது பதவியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ

sr air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் பிரதான அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்

April 17, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அந்த நிறுவனத்தின்

chac

லங்கா நிலக்கரி நிறுவனத்தின் முறைகேடுகளை விசாரிக்க ஜனாதிபதியால் விசேட ஆணைக்குழு

April 17, 2026

அரசுக்குச் சொந்தமான லங்கா நிலக்கரி நிறுவனம் (Pvt) Ltd அல்லது அதன் பின்வந்த நிறுவனங்களில், நிலக்கரி இறக்குமதி மற்றும் மின்சார

up

15 வயது மாணவி சடலமாக மீட்பு

April 17, 2026

செ.தி. பெருமாள் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குதித்து, 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இன்று மதியம்

im

சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்க இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தல்

April 17, 2026

உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் தளம்பல் நிலைகளால் இலங்கை மீண்டும் அபாயங்களை எதிர்கொண்டுள்ளதால், தனது சீர்திருத்த வேலைத்திட்டங்களில் உறுதியாக இருக்குமாறு

ssdfes

அம்பேத்கரின் சிந்தனைகளை யாராலும் தகர்க்க முடியாது – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

April 17, 2026

சாதி ஒழிப்புக்கு கல்வியை தவிர வேறு ஆயுதம் இல்லை என உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசினார். மதுரை

kush

நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது – குஷ்பு

April 17, 2026

“இந்​தத் தேர்​தலில் திமுக-வுக்கு மிகப்​பெரிய ஏமாற்​றம் காத்​திருக்​கிறது. இது முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் திமுக-​வில் உள்ள அனை​வ​ருக்​கும் நன்​றாக தெரி​யும்”

ann

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது – அண்ணாமலை

April 17, 2026

“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கை நினைவில் வைத்துக்கொண்டு வாக்களியுங்கள்,”

kan

மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை – மக்களவையில் கனிமொழி

April 17, 2026

“மகளிர் இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை. ஆனால், அதனை கேடயமாக வைத்து, தொகுதி மறுவரையறை செய்ய உள்ளீர்கள். பிரதமர் மோடியும், உள்துறை