சென்னை
தமிழ்நாட்டின் மாபெரும் வளர்ச்சியை இலக்காகக் கொண்டும், மக்கள் நலனை முழுமையாக மையப்படுத்தியும் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் வியந்து பாராட்டும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்! 2026-27ஆம் ஆண்டிற்கான திருத்திய பொது நிதிநிலை அறிக்கையை மிகச் சிறப்பாகத் தாக்கல் செய்துள்ள நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகிய இருவருக்கும் அவர் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.
இன்று காலை 9.31 மணிக்குத் தொடங்கி சுமார் இரண்டு மணி நேரம் வரை அனல்பறக்க வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் வாசித்து முடித்தார். இதுகுறித்து முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில், “இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் அரசுப் பணியாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் ஒரு புதிய மாபெரும் நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்!
#ThalapathyVijay #TVKGovernment #ChiefMinisterVijay #TNBudget2026 #AgriBudget2026 #MariaWilson #MinisterVinoth #TamilNaduPolitics #TNPolitics #Chennai #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNAssembly #TamilNaduNews #VisionaryBudget #TamilNadu