தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாகரிகமற்ற கருத்துக்களால் தமிழ் மக்களை தலை குனிய வைக்கிறார்கள் – சந்திரசேகரன் எம்.பி

தமிழ் மக்களை தலை குனிய வைக்கும் விதத்திலேயே தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரிகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் பிரதான உற்பத்தி ஆலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்றையதினம் (21-01-2026)பிற்பகல் நடைபெற்றுள்ளது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்கள் தலைகுனியும் விதத்திலேயே நாகரீகமற்ற கருத்துக்களை விதைக்கின்றார்கள் இது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் தலை குனிய வைக்கின்ற ஒரு கருத்துக்களாகவே காணப்படுகின்றன.

அத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் அல்லது அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களையோ ஆதரவாளர்களையோ விமர்சிப்பதை தவிர அவர்கள் வேறு எதனையும் செய்யவில்லை இப்போது பரந்தன் இராசயன தொழிற்சாலையை உருவாக்குவதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறன.

வடக்கில் அபிவிருத்திகளை மேற்கொள்ளுகின்ற போது இங்குள்ள ஒரு சில அரசியல்வாதிகள் சென்று வழக்கு தாக்கல் செய்கின்றார்கள் எங்களுக்கு துறைமுகங்கள் வேண்டாம் அபிவிருத்திகள் வேண்டாம் விளையாட்டு மைதானங்கள் வேண்டாம் யாழ் குடாநாடு எப்படி நாசமாக போனாலும் பரவாயில்லை நான் கொழும்பில் சுதந்திரமாக வாழ்கின்றேன்.

அந்தத் தொணியிலே அவர்கள் செயற்படுகின்றார்கள் எதிர்காலத்தில் மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன் வடமாகான ஆளுனர் மாவட்ட அரச அதிபர் சு.முரளிதரன் கண்டாவளை பிரதேச செயலாளர் த. பிருந்தாகரன் துறைசார் திணைக்கள பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

1956ம் ஆண்டு முதல் 1985 ஆண்டு வரை செயல்பட்ட தொழிற்சாலை, இப்போது கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் புனரமைப்பு பணிகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையின் மறுமலர்ச்சி, பிராந்தியத்தில் தொழில்துறை நடவடிக்கைகளை மீட்டெடுப்பதிலும், இலங்கையின் உள்நாட்டு இரசாயன உற்பத்தி திறனை வலுப்படுத்துவதிலும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்து நிற்கின்றது.

காஸ்டிக் சோடா மற்றும் குளோரின் உற்பத்தி அலகுகளை மறுகட்டமைப்பதற்கான ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பரந்தன் கெமிக்கல்ஸ் லிமிடெட், வளர்ந்து வரும் உள்ளூர் சந்தை தேவையை பூர்த்தி செய்ய பாலி அலுமினியம் குளோரைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தி வசதிகளை நிறுவ திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை