கோவை:
“தமிழக அமைச்சரவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்; அதில் யார் இடம்பெறுவார்கள் என்பதை முதலமைச்சர் விஜய் தான் முடிவு செய்வார்” என்று நிதியமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் செங்கோட்டையனிடம், தவெக அமைச்சரவையில் இன்னும் பல முக்கிய துறைகள் ஒதுக்கப்படாமல் இருப்பது குறித்தும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், “முதலமைச்சர் விஜய் என்ன நினைக்கிறாரோ, அதனை அப்படியே நிறைவேற்ற வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அமைச்சரவை என்பது இப்படித்தான் படிப்படியாக அமையும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் கூட, ஆட்சிக்கு வந்த பொது முதலில் 7 பேரைத் தான் அமைச்சர்களாக நியமித்தார். அதன்பின்னர் தான் படிப்படியாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்தார்” என்று சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று இந்த தவெக ஆட்சியிலும் தமிழக அமைச்சரவை விரைவில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இது முதலமைச்சர் நிலையில் இருந்து இயக்க வேண்டிய விஷயம் என்பதால் அவரே இதில் இறுதி முடிவு எடுப்பார் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து ஆதரவளிக்கும் எஸ்.பி. வேலுமணி தரப்பு உள்ளிட்ட “அதிமுகவினருக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?” என்று செய்தியாளர்கள் நேரடியாகக் கேள்வி எழுப்பினர். அதற்குப் புன்னகையுடன் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், “அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும், நாங்கள் இதுவரை இதுகுறித்து ஒன்றும் சொல்லவில்லையே” என்று நாசூக்காகப் பதிலளித்து நகர்ந்தார். செங்கோட்டையனின் இந்த நிதானமான பேட்டி அமைச்சரவை விரிவாக்க எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
#Sengottaiyan #CabinetExpansion #VijayAsCM #TVK_Government #BreakingNews #May17 #CoimbatoreAirport #TamilNaduPolitics #JayalalithaaLegacy #ThalapathyVijay #NewGovernmentTN #FinanceMinisterTN #ADMK_Berths #PoliticalStrategy #TN_Cabinet2026 #PortfolioUpdate #SengottaiyanSpeech #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`