இனப்படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நினைவாக கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்ட நிகழ்வான “செம்மணி எழுச்சி” எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ளது.
Behind me media மற்றும் Behind me foundation ஆகிய நிறுவனங்களின் ஒழுங்கமைப்பில் மாலை 5:00 மணி தொடக்கம் Albert Campbell Square, Scarborough என்ற முகவரியில் “செம்மணி எழுச்சி” நிகழ்வு நடைபெறவுள்ளது.
வெறும் உடல்கள் மாத்திரமன்றி
ஆயிரம் குடும்பங்களின் சிரிப்புகளும்…
ஆயிரம் கனவுகளும்…
ஆயிரம் சொல்லப்படாத கதைகளும்…
மண்ணுக்குள் புதைக்கப்பட்டதை நாம் இந்த உலகுக்கு உரத்துச் சொல்வோம்.
ஒடுக்கப்பட்ட எம்மினத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் – சொல்லும் பொறுப்புடன் மறுக்கப்பட்ட நீதிக்குக் குரல் கொடுக்க அனைவரும் அணிதிரள்வோம்!