பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்றக் குழுவின் முன் முக்கிய அதிகாரிகள் சாட்சியமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்படி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, முன்னாள் துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் ஜனித் ருவன் கொடித்துவக்கு ஆகியோர் அழைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இந்த முன்மொழிவை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா உள்ளிட்டோர், குழுவின் தலைவர் ஹர்ஷன நாணயக்காரவிடம் சமர்ப்பித்துள்ளனர்.
கோரப்பட்ட சாட்சிகளை அழைப்பது குறித்து தீர்மானிப்பதற்காக இந்த விசாரணைக் குழு இன்று (22) நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.