களுத்துறை மாவட்டம், மீவனபாலான பகுதியில் இடம்பெற்ற துயரச் சம்பவமொன்று ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
25 வயதுடைய ஷானிகா செவ்வந்தி என்ற இளம் யுவதி, தான் நீண்ட காலமாக காதலித்த நபருடன் விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருந்த நிலையிலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானசாலைக்கு தனது காதலருடன் செல்ல இந்த யுவதி ஆசைப்பட்டுள்ளார். எனினும், காதலர் இவரை அழைக்காமல் தனியாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட ஏமாற்றமும், மன உளைச்சலும் யுவதி தவறான முடிவை எடுக்க காரணம் என கூறப்படுகின்றது.
அபாயகரமான நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வேளையில், அவர் தனது தாயாரிடம் கூறிய வார்த்தைகள் அனைவரையும் கலங்க வைத்துள்ளது.
“அம்மா, நான் அவரைப் பயமுறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் செய்தேன். உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்கத்தில் அல்ல.” என்று கூறியுள்ளார்.
எனினும், மருத்துவர்களின் தீவிர முயற்சிகள் பலனின்றி அந்த இளம் உயிர் பிரிந்தது