குற்றம் இழைத்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு சர்வதேச பொறிமுறையும் இதுவரை நிறுவப்படவில்லைஎன ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது
ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் உயிர்களையும் துப்பாக்கிகள் மௌனித்த பின்னரும் முடிவுக்கு வராத தமிழ் இனப்படுகொலையையும் இந்நாளில் நாம் நினைவு கூருகிறோம்.
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது அவர்களது நிலை என்னவென்று இதுவரை அறியப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு எதிராக கிளஸ்டர் குண்டுகள் ) போன்ற சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். குற்றங்களை எந்தவொரு தண்டனையுமின்றி தடையின்றி மேற்கொள்வதற்காக சாட்சிகள் வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டனர்.
இதற்கான சான்றுகள் எந்தவொரு கேள்விக்கும் அப்பாற்பட்டவை. பல ஐநா அறிக்கைகள் மற்றும் சுயாதீன விசாரணைகளின் கண்டுபிடிப்புகள் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்கவில்லை — ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் ஆகும்.
சர்வதேச சமூகத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் – போரின் இறுதி மாதங்களில் உங்களது நடத்தை ஒரு “அமைப்பு ரீதியான தோல்வி என்று உங்களது சொந்த உள்வாரி மதிப்பாய்வே குறிப்பிட்டிருந்தது. 17 ஆண்டுகள் கடந்த பின்னரும்இ அந்தத் தோல்வியானது இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்களிக்கும் தொடர்ச்சியான கலாச்சாரமாகவே மாறியுள்ளது.
குற்றம் இழைத்தவர்களில் ஒருவர் கூட சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. நம்பகமான எந்தவொரு சர்வதேச பொறிமுறையும் இதுவரை நிறுவப்படவில்லை. பாதுகாக்கப்பட வேண்டியவர்களைப் பாதுகாக்காதபோது ‘பாதுகாப்பதற்கான பொறுப்பு’ ) என்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்கள் இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடும்போதும் இலங்கைக்கு கடன் வழங்கும்போதும் உலக அரங்கில் அதன் அரசாங்கத்திற்கு மேடையமைத்துக் கொடுக்கும்போதும் தமிழ் தாய்மார்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தேடி தங்களது பத்தாவது ஆண்டு போராட்டத்திற்குள் கால் பதிக்கின்றனர்.