சென்னை
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு இன்று தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்தவொரு புதிய திட்டமும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்! பட்ஜெட் என்ற பெயரில் முதலமைச்சருக்கு ஜால்ரா மட்டுமே அடிக்கப்பட்டுள்ளதாக அவர் ஆவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “காவிரியில் தான் தண்ணீர் வரவில்லை என்று பார்த்தால், இந்த வேளாண் பட்ஜெட்டிலும் விவசாயிகளுக்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான திட்டமும் வரவில்லை. குறுவை சாகுபடி செய்ய முடியாமல் உழவர்கள் தவித்து வரும் தற்போதைய சூழலில், அவர்களுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்படாதது மாபெரும் ஏமாற்றமளிக்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தவெக அரசின் இந்த ஏமாற்று பட்ஜெட்டுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
மேலும் தவெக அரசைச் சாடிய அவர், “பழைய திராவிட மாடல் திட்டங்களுக்கு வெறும் பெயர் மாற்றிப் புதிய திட்டம் போல் அறிவித்துள்ளார்கள். 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்துவிட்டு, இப்போது வெறும் ரூ.75,000 மட்டுமே தள்ளுபடி செய்து உழவர்களை அப்பட்டமாக ஏமாற்றியுள்ளனர். காவிரி விவகாரம் மற்றும் உழவர்களின் பிரச்சனைகள் குறித்து நாளை பேரவையில் விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரச் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளோம். காவிரி விவகாரத்தில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியும் முதலமைச்சர் விஜய் பதிலளிக்க மறுக்கிறார். அவருக்குத் தைரியம் இருந்தால் நாளை சட்டப்பேரவையில் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கட்டும்!” என உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்!
#UdhayanidhiStalin #ThalapathyVijay #TVKGovernment #AgriBudget2026 #DMK #TamilNaduPolitics #TNPolitics #Chennai #CauveryIssue #FarmersIssue #TamilNews #ViralNews #LatestNewsTN #TrendingTN #TNAssembly #PoliticalUpdatesTN #BlackShirtProtest