பிராம்ப்டன், ஒன்டாரியோ (மார்ச் 18, 2026) – பிராம்ப்டன் நகரம், அரசு நிதி அலுவலர்கள் சங்கம் (GFOA) வழங்கும் கனடிய நிதி அறிக்கை விருதை (CAnFR) தொடர்ந்து 24வது ஆண்டாக பெற்றுள்ளது. இந்த விருது, கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நகராட்சிகளின் நிதி அறிக்கையிடலில் சிறப்பை குறித்து நிற்கின்றது.
இந்த அங்கீகாரம், நகரத்தின் 2024 ஆண்டிற்கான ஆண்டு நிதி அறிக்கையையும், அரசு கணக்கியல் மற்றும் நிதி அறிக்கையிடலில் உயர்ந்த தரநிலைகளை பின்பற்றும் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
பிராம்ப்டன் நகரம், குடியிருப்பாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான ஆண்டு அறிக்கையை தயாரித்து வெளியிடுகிறது. இந்த அறிக்கை, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளின் குறைந்தபட்ச தேவைகளை விட அதிகமாக உள்ளது. இந்த அங்கீகாரம், வலுவான நிதி அறிக்கை தரநிலைகளையும், குடியிருப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தும் தொடர்ச்சியான முயற்சியையும் பிரதிபலிக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
“அரசு நிதி அலுவலர்கள் சங்கத்திலிருந்து கனடிய நிதி அறிக்கை விருதை 24வது முறையாகப் பெறுவது, பொறுப்புணர்வு மற்றும் திறந்த நிர்வாகத்திற்கு எங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை காட்டுகிறது. எங்கள் நிதி குழுவினருக்கு, குடியிருப்பாளர்களின் வரி பணம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை தெளிவாகவும் எளிதாகவும் விளக்கும் அவர்களின் பணிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.” என பிராம்ப்டன் நகர மேயர் பாட்ரிக் பிரவுன் தெரிவித்திருக்கின்றார்.