ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி; அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் இடைநிறுத்தம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் பணிகளை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தவுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகக் குழுவின் தலைவர் நேற்று(21) இதனைத் தெரிவித்தார்.

கிரீன்லாந்தின் உரிமையைக் கையகப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தவறினால், சில ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகப் பழிவாங்கும் நோக்கில் சுங்க வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்திய சில நாட்களிலேயே ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

கடந்த ஜூலை இறுதியில் ஸ்கொட்லாந்தின் டர்ன்பெரி (Turnberry) நகரில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியாக, அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளைக் குறைப்பது மற்றும் 2020 இல் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு அமெரிக்க கடல் நண்டுகளுக்கான வரிவிலக்கைத் தொடர்வது குறித்த சட்ட முன்மொழிவுகளை ஐரோப்பிய ஒன்றியம் விவாதித்து வந்தது.

இந்த முன்மொழிவுகளுக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களின் அங்கீகாரம் அவசியமாகும்.

இந்த வர்த்தக ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்று பல சட்டமியற்றுபவர்கள் ஏற்கனவே முறைப்பாடு தெரிவித்து வந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் பெரும்பாலான இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டியிருக்கும் நிலையில், அமெரிக்கா 15% வரி விகிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இருப்பினும், சில நிபந்தனைகளுடன் இதனை ஏற்க அவர்கள் முன்னர் சம்மதித்திருந்தனர்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வர்த்தகக் குழு இது குறித்த தனது நிலைப்பாட்டை ஜனவரி 26-27 திகதிகளில் வாக்கெடுப்பு மூலம் அறிவிக்கவிருந்தது. தற்போது அந்த வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வர்த்தகக் குழுவின் தலைவர் பேர்ண்ட் லாங்கே (Bernd Lange) செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ட்ரம்ப்பின் புதிய சுங்கவரி அச்சுறுத்தல்கள் டர்ன்பெரி ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, மறு அறிவித்தல் வரும் வரை இந்த ஒப்பந்தம் தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

boa

இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்

March 5, 2026

இலங்கைக்குச் சொந்தமான கடற்பரப்பைத் தாண்டிச் சென்று மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அனைத்து

jail

தவிசாளரை அவதூறாகப் பேசிய இளைஞனுக்கு விளக்கமறியல்

March 5, 2026

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாகப் பேசி, அவரது கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை