சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலையைக் கண்காணிக்கும் ‘FAO உணவு விலைக் குறியீடு’ (FAO Food Price Index), கடந்த பிப்ரவரி மாதத்தில் ஏற்பட்ட உயர்வை விட இரண்டு மடங்கு அதிகமாக மார்ச் மாதத்தில் உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய மாதங்களில் உணவுப் பொருட்கள் விலை சரிந்து வந்த நிலையில், தற்போது இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தானியங்கள், இறைச்சி, பால் பொருட்கள், தாவர எண்ணெய் மற்றும் சர்க்கரை என அந்த அமைப்பால் கண்காணிக்கப்படும் அனைத்துப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதாக FAO கூறியுள்ளது. “தாவர எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி தொடர்பான அழுத்தங்களே ஒட்டுமொத்த குறியீட்டின் உயர்வுக்கு முக்கியக் காரணம்,” என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
சீனி விலையானது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு அதன் உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் சர்க்கரை வர்த்தகத்தைப் பாதிக்கும் என்ற கவலையுமே முக்கியக் காரணங்களாக FAO சுட்டிக்காட்டியுள்ளது.