தைலாபுரம்,
2026 சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடும் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மிக உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: “அன்புமணியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மரண வேதனை எனக்கு மட்டுமே தெரியும். எப்போது அன்புமணி என் பேச்சைக் கேட்காமல், பணத்திற்காக அலையத் தொடங்கினாரோ அன்றே ஒரு தந்தையாக நான் செத்துவிட்டேன். உங்களுக்காக நான் சிந்திந்த ரத்தத்தைச் ‘சமூக நீதி வியாபாரமாக’ அன்புமணி மாற்றிவிட்டார். ஒவ்வொரு தேர்தல் சீட்டையும் பல கோடிகளுக்கு விற்று, சமுதாய உரிமைகளை அடகு வைத்துவிட்டார்.
பெற்ற அப்பனையே கவனிக்காத ஒருவன், உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு நன்மை செய்வானா? அரசியலில் விமர்சனங்கள் இருக்கலாம், ஆனால் முதல்வர் ஸ்டாலின் தன் தந்தை கலைஞரைச் சாகும் வரை கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். எனக்கு வாய்த்த பிள்ளையோ, நான் உயிரோடு இருக்கும்போதே என்னைச் செத்துப்போனதாக நினைத்து அரசியல் பண்ணுகிறார். மாம்பழச் சின்னத்திற்குள் இப்போது துரோகம் எனும் விஷம் ஏறிவிட்டது. என் ரத்தமே எனக்கு விஷமானாலும், என் தொண்டர்கள் எனக்கு மருந்தாக இருப்பீர்கள் என நம்புகிறேன். துரோகக் கும்பலை மண்ணைக் கவ்வச் செய்யுங்கள்!” என ராமதாஸ் அந்த அறிக்கையில் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்.
#DrRamadoss #AnbumaniRamadoss #PMK #TamilNaduElection2026 #PMKInternalConflict #SavePMK #VanniyarPolitics #PoliticalCrisis #TamilPolitics #Election2026 #FatherSonRift #SocialJustice #Betrayal #TNElections #SasikalaAlliance #Thailapuram #PMKFaction #VoteCarefully #ViralLetter #BreakingNews