அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹணவின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் சிறப்பு சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஜித் ரோஹணவின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

1966 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி பிறந்த அஜித் ரோஹண, கனம்பெல்ல ஜூனியர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றார்.

பின்னர் 1988 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி உதவிப் பொலிஸ் பரிசோதகராக (SI) இலங்கை பொலிஸ் சேவையில் நேரடியாக இணைந்த அவர், தனது முதல் நியமனமாக திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் கடமைகளை ஆரம்பித்தார்.

பின்னர் லுணுகம்வெஹெர மற்றும் வதுரம்ப ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய அவர், அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் வலஸ்முல்ல பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய காலத்தில் பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டார்.

1999 ஆம் ஆண்டில் உதவி பொலிஸ் அத்தியாட்சகர் தர உயர்வுக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த அவர், 2005 ஆம் ஆண்டில் சூடானிலும் 2010 ஆம் ஆண்டில் ஹைட்டியிலும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் பணியாற்றினார்.

2007 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியாட்சகராக தரம் உயர்த்தப்பட்டு, பொலிஸ் தலைமையகப் பரீட்சைப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றிய அதேவேளை, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி பட்டத்தைப் பெற்று, சட்டக் கல்லூரியின் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

2012 ஆம் ஆண்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகராகவும் (SSP), 2016 ஆம் ஆண்டில் பிரதி பொலிஸ் மா அதிபராகவும் (DIG) தரம் உயர்த்தப்பட்ட அஜித் ரோஹண, 2021 ஜூன் 30 ஆம் திகதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக (Senior DIG) தரம் உயர்த்தப்பட்டார்.

தனது நீண்ட சேவைக்காலத்தில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி உட்பட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ள அவர், பொலிஸ் சேவையின் போது வழங்கப்படும் பல விருதுகள், பதக்கங்கள், பொலிஸ் மா அதிபரின் விசேட பாராட்டுக்கள் மற்றும் சம்பள உயர்வுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WhatsApp Image 2026-09-20 at 8.12.54 AM

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு உருவச்சிலை அமைக்க அனுமதிப்பீர்களா..

September 20, 2026

வடக்கில் தற்போது திலீபனுக்கு உருவச்சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின் எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் உருவச்சிலை அமைக்க இந்த

WhatsApp Image 2026-09-20 at 8.03.42 AM

வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு!

September 20, 2026

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம்

WhatsApp Image 2026-09-20 at 8.03.42 AM

இலங்கைக்கு விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026

இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் திறன் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கையின் கடன் நிலைபேறுதன்மை நிலவினாலும்,

srith

நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

September 20, 2026

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

MediaFile_20260919_231438_641

அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து

September 20, 2026

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித்

s

3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்!

September 20, 2026

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி

ar

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

September 19, 2026

சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு

WhatsApp Image 2026-09-19 at 9.31.30 PM

தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்!

September 19, 2026

பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவை இணைக்கும் 4

WhatsApp Image 2026-09-19 at 9.26.30 PM

மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது – ரணில்

September 19, 2026

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

WhatsApp Image 2026-09-19 at 9.22.21 PM

போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்

September 19, 2026

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு

WhatsApp Image 2026-09-19 at 9.18.14 PM

தேசிய கொள்கைக் கட்டமைப்பு UNP கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – ரணில்

September 19, 2026

இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்மொழியப்பட்ட தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட அரசியல்

thiru

யாழ். திருவள்ளுவர் கலாசார மன்ற நிர்வாகம்; நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு!

September 19, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு